Tamilnadu
கூடங்குளம் 5,6 அணு உலை: அபாயகரமான திட்டத்துக்கு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் உள்ளதா? - டி.ஆர்.பாலு கேள்வி!
திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளரும், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி. ஆர். பாலு, நேற்று (10 மார்ச் 2021) மக்களவையில், சுற்றுச் சூழலை பாதிக்கும், கூடங்குளம் அணு மின் திட்டத்திற்கான சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடுகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.
மத்திய பணியாளர் மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர், டாக்டர் ஜிதேந்திர சிங் , தமிழ் நாட்டிலுள்ள, கூடங்குளம் அணு மின் நிலையத்தில், ஐந்தாவது மற்றும் ஆறாவது அணு மின் உலைகள் துவங்கப்பட உள்ளதா? எனவும், அபாயகரமான தீங்கை விளைவிக்கும் 6,000 மெகாவாட் திட்டத்திற்கு, தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? எனவும், சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடுகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா? என்றும் விரிவான கேள்வியை, மக்களவையில், டி. ஆர். பாலு, எழுப்பினார்.
இந்த கேள்விக்கு பிரதமர் சார்பில், மத்திய பணியாளர் மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் மக்களவையில், அளித்த பதில் பின் வருமாறு:
“தமிழ் நாட்டிலுள்ள, கூடங்குளம் அணு மின் நிலையத்தில், 1,000 மெகாவாட் திறனுடைய, ஐந்தாவது மற்றும் ஆறாவது அணு உலைகள், ஒவ்வொன்றும், அடுத்த 66 மற்றும் 75 மாதங்களில், திறன் மிகுந்த ஒப்பந்தக்காரர்களால் கட்டி முடிக்கப்படவுள்ளது.
இந்திய அணு சக்தி கழகத்தின் மேற்பார்வையிலும், அணு சக்தி ஒழுங்காற்று ஆணையத்தின், பாதுகாப்பு விதிகளின் படியும், இந்த ஆறு அணு உலைகளுக்கான, தடையில்லா சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளதால், சுற்றுச் சூழலுக்கும், பொது மக்களுக்கும், எவ்விதமான ஆபத்தும் நிகழ வாய்ப்பில்லை.
சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடுகள் மற்றும் பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் ஆகியன, மத்திய சுற்றுச் சூழல், காடுகள் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் மூலம், முறையாக பின்பற்றப்பட்டுள்ளதால், இத்திட்டத்திற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.” என்று இணையமைச்சர், டாக்டர் ஜிதேந்திர சிங் பதிலளித்துள்ளார்.
Also Read
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!