Tamilnadu
“பிரிட்டிஷாரை எப்படி விரட்டி அடித்தோமோ அதேபோன்று நரேந்திர மோடியை திருப்பி அனுப்புவோம்” : ராகுல்காந்தி
தென் மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி இரண்டாவது நாள் தேர்தல் பரப்புரையாக பாளையங்கோட்டை புனித சவேரியார் தன்னாட்சிக் கல்லூரியில் கல்வியாளர்கள் பேராசிரியர்கள். உடன் கலந்துரையாடல் மேற்கொண்டார் பல்வேறு ஆசிரியர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி கலந்துரையாடல் வடிவில் கற்றல் கற்பித்தல் பணிகள் இருக்கவேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய ராகுல் காந்தி, “கல்வித்துறைக்கான முழு அதிகாரமும் மத்திய அரசிடம் இருக்கக்கூடாது. முழு அதிகாரமும் மத்திய அரசிடம் இருப்பதால் கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது. தமிழ்நாடு வெற்றி நடைபோடுகிறது யார்? தமிழகத்தில் மூன்று பேர் மட்டுமே தமிழகத்தில் வெற்றி பெற்று இருக்கின்றனர்.
குறிப்பாக, நாட்டின் மதச்சார்பின்மையை சீர்குலைக்கும் வகையில் மத்திய அரசு இந்துத்துவா கொள்கையை கொண்டுள்ளது. மேலும், மத்திய அரசு சில குறிப்பிட்ட மதத்தினரை பேச அனுமதி மறுக்கிறது. ஒரு சமூகம் முன்னேற வேண்டுமென்றால் தங்களுக்கு உரிய மரியாதை அங்கீகாரம் கொடுக்கப்படவேண்டும்.
ஆனால் அந்த அங்கீகாரம் பா.ஜ.க ஆட்சி கொடுப்பத்தில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு உரிய மரியாதை அங்கீகாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 70 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷாரை எப்படி விரட்டி அடித்தோம் அதேபோன்று எவ்விதமான வெறுப்பும் கலவரம் இன்றி நரேந்திர மோடி நாக்புருக்கு திருப்பி அனுப்புவோம்” என்று தெரிவித்தார்.
Also Read
-
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் - தமிழக வேட்பாளருக்கு திமுகவின் ஆதரவைக்கேட்பது நகைப்புக்குரியது: முரசொலி!
-
162 அடுக்குமாடி குடியிருப்பு முதல் பெண்களுக்கான Gym வரை... கொளத்தூரில் இடைவிடாது சுற்றி சுழன்ற முதல்வர்!
-
கொளத்தூரில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம் : 2 இறகுப்பந்து ஆடுகளங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் என்ன?
-
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?