Tamilnadu
நண்பரிடமே பணமோசடி : கடனை திருப்பிக் கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏ இன்பதுரை!
நெல்லை மாவட்டம், சேரன்மாதேவியைச் சேர்ந்தவர் டி.வி.மணி. இவர் பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில், இவர் நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவீன்குமார் அபினியிடம் அ.தி.மு.க எம்.எல்.ஏ இன்பதுரை மீது பணமோசடி புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், "அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரையும், நானும் நீண்ட கால நண்பர்கள். கடந்த 2019ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 22ம் தேதி இன்பதுரை என்னிடம் 40 லட்சம் ரூபாய் கடனாகக் கேட்டார். இதையடுத்து இன்பதுரையின், சென்னை உயர்நீதிமன்ற இந்தியன் வங்கிக் கிளை கணக்கில், எனது மகனின் வங்கிக் கணக்கு மூலம் பணத்தை செலுத்தினேன்.
பின்னர், இந்த பணத்தைத் திருப்பிக் கேட்டபோது இன்பதுரை தரவில்லை. மேலும் அரவது அடியாட்களை வைத்து தொலைபேசி மூலமாக கொலை மிரட்டல் விடுக்கிறார். இது பற்றி சம்பந்தப்பட்ட காவல்நிலையம் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்தேன். ஆனால் அவர்கள் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எம்.எல்.ஏவுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க எம்.எல்.ஏ இன்பதுரை நண்பரிடமே பணமோசடியில் ஈடுபட்டுள்ள சம்பவம் நெல்லை பகுதி மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
போதை பொருள்வழக்கு : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறவினர் வீட்டில் அதிரடி சோதனை !
-
ஹரியானாவில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொடரும் எதிர்ப்பு : துரத்தியடித்த பொதுமக்கள் !
-
பேட்டிங்கில் சொதப்பிய CSK : பஞ்சாப் அணி அபார வெற்றி... சென்னையில் பிளே ஆஃப் வாய்ப்புக்கு சிக்கல் !
-
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து விவாதிக்க தயாரா? : மோடிக்கு மீண்டும் மல்லிகார்ஜூன கார்கே கடிதம்!
-
போதைப் பொருட்களை பதுக்கிய அதிமுக ஜெயக்குமாரின் உறவினர் கைது : போலிஸ் அதிரடி!