Tamilnadu
“பெட்ரோல் டீசல் விலை மூலம் வசூல் வேட்டை நடத்தும் பா.ஜ.க அரசு” : தமிழகம் முழுவதும் தி.மு.க ஆர்ப்பாட்டம்!
மத்திய பா.ஜ.க அரசு வீடுகளில் பயன்படுத்தப்படும் காஸ் சிலிண்டர் விலையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 75 ரூபாய் வரை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. அதே போல ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.92.59. டீசல் விலை ரூ.85.98 என்றும் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
இந்த வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்திய மோடி மற்றும் எடப்பாடி அரசைக் கண்டித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாநிலம் முழுவதும் கண்டன ஆர்பாட்டம் நடைபெறுகிறது.
முன்னதாக பெட்ரோல், டீசல், சமையல் காஸ் ஆகியவற்றின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும். இனிமேலும் விலையேறாமல் தடுத்திடவும், மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தும், இதுபோன்ற விலையேற்றத்தை தொடர்ந்து செய்து வரும் மத்திய பா.ஜ.க அரசையும், அதனை கண்டிக்க முன்வராத அ.தி.மு.க அரசையும் கண்டிக்கும் வகையில் 22ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
தி.மு.க தலைவரின் அறிவுறுத்தலின் படி, இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மேலும் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களும், பொதுமக்க்ளும் கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பினர்.
Also Read
-
தமிழ்நாட்டின் திட்டங்களுக்கான நிதியை எப்போது விடுவிப்பீர்கள்? கேள்விகளை அடுக்கிய தி.மு.க எம்.பிக்கள்!
-
“வரலாற்றில் இடம்பிடித்த சிலை…மார்க்ஸை வடிவமைக்கும் போது பூரித்தேன்” : நெகிழ்ந்த சிற்பி கார்த்திகேயன்!
-
U19 உலகக்கோப்பை: சூர்ய வம்சியின் அதிரடி ஆட்டம்! இங்கிலாந்திற்கு 411 ரன்கள் இமாலய இலக்கு நிர்ணயம்!
-
6 புதிய சமத்துவபுரங்கள்: சாலை, பாலங்கள்- புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.348.59 கோடி செலவில் அரசு மருத்துவமனை கட்டடங்கள்: மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் முதலமைச்சர்!