Tamilnadu
பணம் பறிப்பதற்காக கடைகளை அகற்ற முயன்ற அதிமுகவினர், மாநகராட்சி ஊழியர்கள்: திநகர் வியாபாரிகள் குற்றச்சாட்டு
சென்னை தியாகராய நகரில் சாலையோரமாக 40 வருடங்களுக்கு மேலாக சிறிய கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அ.தி.மு.க பிரமுகர்கள் சிலரும் மாநகராட்சி அதிகாரிகள் சிலரும் சேர்ந்து நீதிமன்றம் அனுமதி வழங்கிய கடைகளை அப்புறப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்காக புதிதாக வெளி நபர்கள் சிலரை தியாகராய நகர் பகுதிக்கு வரவழைத்து இரவோடு இரவாக தற்காலிகமாக தடை போட வைத்துள்ளனர். இதனால் முன்பு வியாபாரம் செய்து வந்த வியாபாரிகளுக்கும் புதிதாக கடை அமைத்து அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. குறிப்பாக இந்த அப்புறப்படுத்தும் செயலானது வியாபாரிகளிடமிருந்து பணம் பறிக்கும் நோக்கத்திற்காக செய்யப்படுவதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேற்கு மாம்பலம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாகவும் சிறிது போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
Also Read
-
“எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
2,18,000 மெ.டன் கொள்ளளவிலான 10 நவீன நெல் சேமிப்பு வளாகங்களுக்கு அடிக்கல்! : முழு விவரம் உள்ளே!
-
ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.12,000 ஓய்வூதியம் : ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“மதவாத அமைப்பினருக்கு வளைந்து கொடுக்கும் நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன்” : மு.வீரபாண்டியன் குற்றச்சாட்டு!
-
இவர்கள் சித்தாத்தம் இருக்கும் வரைம் திமுகவை தொட்டுக் கூட பார்க்க முடியாது : திவ்யா சத்யராஜ் அதிரடி பேச்சு