Tamilnadu
வீட்டுக்குள் புகுந்து இரட்டைக் குழந்தைகளை தூக்கிச்சென்ற குரங்கு: ஒரு குழந்தை பலியான சோகம்- கதறியழுத தாய்!
தமிழகத்தின் பல மாவட்டங்களில் குரங்குகள், குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்நிலையில், குரங்குகளால் தஞ்சாவூரில் குழந்தை பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மேல அலங்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. பெயிண்டராகப் பணி செய்து வரும் இவருக்கு புவனா என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இந்த தம்பதியினருக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.
புவனா, இரட்டைக் குழந்தைகளுடன் வீட்டில் இருந்த நிலையில், இன்று பிறபகல் புவனா கழிவறைக்குச் சென்ற நேரத்தில், வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்ளே சென்ற குரங்கு குழந்தைகளைத் தூக்கிச் சென்றுள்ளது. சத்தம் கேட்டு கழிவறையில் இருந்து வந்த புவனா கத்தவே, ஒரு குழந்தையை ஓட்டில் போட்டு விட்டு, மற்றொரு குழந்தையை தூக்கிச் சென்றுள்ளது.
குழந்தையை அப்பகுதியில் வெகுநேரம் தேடிய உறவினர்கள், வீட்டுக்குப் பின்னே அகழியில் கிடந்த குழந்தையை மீட்டு தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குரங்கு தூக்கிச்சென்ற குழந்தை இறந்ததால் தாய் புவனா கதறி அழுதது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து தஞ்சை மேற்கு காவல் நிலைய போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகமாக இருப்பதாக மாவட்ட ஆட்சியரிடமும், வனத்துறை அதிகாரிகளிடமும் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை எனவும், அதிகாரிகளின் அலட்சியமே குழந்தை பலிக்குக் காரணம் எனவும் இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
Also Read
-
“கோவிட் காலத்தில் கைதட்ட சொன்ன மோடி.. இப்போதும் மோடி அரசு திருந்தியபாடில்லை..” - திமுக இளைஞரணி விமர்சனம்!
-
RCB அணியை வாங்கியது இவர்களா? மிகப்பெரிய தொகைக்கு கைமாற்றம்.. அணியில் மாற்றம் நிகழுமா! - முழு விவரம்!
-
“175 இடங்களில் உதயசூரியன்; 234 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின்தான் வேட்பாளர்!”: முதல்வர் மு.க.ஸ்டாலின் மடல்!
-
“சிலிண்டர் வழங்குவது மாநில அரசின் கையிலா இருக்கிறது?” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“பழனிசாமி மகா பொய்யர் என்பதை சாத்தான்குளம் வழக்கு மெய்ப்பித்துள்ளது!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!