Tamilnadu
உயர்மின் கோபுரம் திட்டத்துக்கு எதிராக காத்திருப்பு போராட்டம்: மொட்டையடித்து போராடிய திருப்பூர் விவசாயிகள்
விளை நிலங்கள் வழியாக புதிதாக உயர்மின் கோபுரம் அமைக்கப்படுவதை கைவிடக்கோரி திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே படியூரில் விவசாயிகள் 11 வது நாளாக இன்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று மொட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய தந்தி சட்டத்தை நீக்க வேண்டும், விவசாய நிலங்கள் வழியாக அமைக்கப்படவுள்ள விருதுநகர் முதல் காவுத்தம்பாளையம் வரையிலான 765 கிலோ வாட் உயர் மின் கோபுர திட்டத்தை முழுமையாக நிறுத்த வேண்டும்,அனைத்து உயர்மின் கோபுர திட்டங்களும் சாலையோரமாக கேபிள் மூலம் அமைக்க வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாத வாடகை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்
கடந்த 10 நாட்களாக படியூரில் நடைபெற்று வரும் விவசாயிகளின் தொடர் காத்திருப்பு போராட்டத்தின் போது, அரைநிர்வாண போராட்டம், கஞ்சி தொட்டி திறப்பு, ரத்தத்தால் உயர் மின் கோபுரம் வேண்டாம் என்று எழுதியது, தங்களது நிலத்துக்கான பட்டா நகலை தீயிட்டுக் கொளுத்தியது, கால்நடைகளுடன் போராட்டம் நடத்தியது ,கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தியது, தென்னங்கன்றுகளுக்கு பூஜை செய்து நூதன போராட்டம் செய்தது, மணி அடித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவது, உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று 11-ம் நாள் போராட்டத்தின் போது அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மொட்டையடித்து நூதன போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினர்.
Also Read
-
பெரம்பூரில் ரூ.39 கோடியில் 310 திறந்தவெளி மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
கொளத்தூர் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்! - 6 நியாய விலைக்கடைகள், மறுவாழ்வு மையம் தொடக்கம்!
-
தமிழ்த்தாயின் தலைமகன் : பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் : காப்பீட்டு நிறுவனங்களுக்கு அமைச்சர் MRK உத்தரவு!
-
பெண்ணையாறு - ஒன்றிய அரசு நடுவர் மன்றத்தை உடனே அமைக்க வேண்டும் : அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல்!