Tamilnadu
உயர்மின் கோபுரம் திட்டத்துக்கு எதிராக காத்திருப்பு போராட்டம்: மொட்டையடித்து போராடிய திருப்பூர் விவசாயிகள்
விளை நிலங்கள் வழியாக புதிதாக உயர்மின் கோபுரம் அமைக்கப்படுவதை கைவிடக்கோரி திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே படியூரில் விவசாயிகள் 11 வது நாளாக இன்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று மொட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய தந்தி சட்டத்தை நீக்க வேண்டும், விவசாய நிலங்கள் வழியாக அமைக்கப்படவுள்ள விருதுநகர் முதல் காவுத்தம்பாளையம் வரையிலான 765 கிலோ வாட் உயர் மின் கோபுர திட்டத்தை முழுமையாக நிறுத்த வேண்டும்,அனைத்து உயர்மின் கோபுர திட்டங்களும் சாலையோரமாக கேபிள் மூலம் அமைக்க வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாத வாடகை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்
கடந்த 10 நாட்களாக படியூரில் நடைபெற்று வரும் விவசாயிகளின் தொடர் காத்திருப்பு போராட்டத்தின் போது, அரைநிர்வாண போராட்டம், கஞ்சி தொட்டி திறப்பு, ரத்தத்தால் உயர் மின் கோபுரம் வேண்டாம் என்று எழுதியது, தங்களது நிலத்துக்கான பட்டா நகலை தீயிட்டுக் கொளுத்தியது, கால்நடைகளுடன் போராட்டம் நடத்தியது ,கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தியது, தென்னங்கன்றுகளுக்கு பூஜை செய்து நூதன போராட்டம் செய்தது, மணி அடித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவது, உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று 11-ம் நாள் போராட்டத்தின் போது அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மொட்டையடித்து நூதன போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினர்.
Also Read
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!
-
“18-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் SDPI-க்கு வாழ்த்துகள்!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“ஒயிட் வாஷான ஆப்கானிஸ்தான்.. கடைசி ஆட்டத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் அதிரடி” - முழுத் தகவல் உள்ளே!