Tamilnadu
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் பலி.. 569 பேருக்கு பாதிப்பு : கொரோனா பாதிப்பு நிலவரம் ! #COVID19
மிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 569 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,32,415 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 62,619 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,56,40,385 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் இன்று மட்டும் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,34,740 ஆக அதிகரித்துள்ளது.
அதேப்போல், கொரோனாவால் இன்று மேலும் 07 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 12,316 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக இன்று சென்னையில் 168 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,30,195ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 642 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8,17,520 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 4904 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!