Tamilnadu
“எதிர்க்கட்சிகளை தொடர்ந்து நிராகரித்தால் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடக்கும்”: தி.மு.க எம்.பி எச்சரிக்கை!
தேஜஸ் விரைவு ரயிலை திண்டுக்கல் சந்திப்பிலும் அமிர்தா விரைவு ரயிலை ஒட்டன்சத்திரம் சந்திப்பிலும் நிறுத்த வேண்டும் எனக் கோரி திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி மதுரை தெற்கு ரயில்வே கோட்ட மேலாளரை சந்தித்து மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி வேலுச்சாமி, “மத்திய அரசு எதிர்க்கட்சிகளை முடக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. உரிய அங்கீகாரம் வழங்க மறுக்கிறது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் ரயில் நிறுத்த வேண்டுகோளை கூட ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் தான் ரயில்வே நடைமுறையிலுள்ளது.
மேலும் பொதுமக்களிடம் எங்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்து வருவதை தடுக்கும் வகையிலும் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. நாங்கள் எங்களுக்காக இந்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. பொதுமக்களின் நலனுக்காகவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
தெற்கு ரயில்வே மண்டல கோட்ட மேலாளரிடம் மனு அளித்துள்ளோம். மனுவை ஏற்கவில்லை என்றால், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அனைத்து எம்.பிகளையும் கூட்டி குரல் கொடுப்பேன். அதற்கும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றால் நாடாளுமன்றம் முன்பு மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
Also Read
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
சிந்தனைத் திறன் குறித்து தவறாக தகவல் பரப்பிய நடிகர் ரோபோ சங்கர் மகள்! : விளக்கமளித்த TN Fact Check!