Tamilnadu
டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு வலுசேர்க்க சென்னையில் விவசாயிகள் தொடர்போராட்டம்!
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 40 நாட்களுக்கு மேலாக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, போராட்டத்திற்கு வலுசேர்த்திடவும், தமிழக விவசாயிகளின் ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் வகையிலும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு காத்திருப்புப் போராட்டம் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெறுகிறது.
இந்தப் போராட்டத்தை வாழ்த்தி தி.மு.க அமைப்பு செயலாளர் திரு.ஆர்.எஸ்.பாரதி எம்.பி., மார்க்சிஸ்ட் கட்சி தமிழ் மாநிலக் குழு செயலாளர் திரு.கே.பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலக் குழு செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் துணை பொதுச்செயலாளர்மல்லை சத்யா, மனித நேயமக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல்சமது, எஸ்.டி.பி.ஐ கட்சி தமிழ் நாடு தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் பங்கேற்று மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
மாநில முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகளும், பொதுமக்களும் பங்கேற்றுள்ளனர்.
Also Read
-
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு.. 12 மாநிலங்களில் நடத்தப்படும் SIR.. எந்தெந்த மாநிலங்கள்? எப்போது? - விவரம் !
-
SIR-க்கு ஆதரவு : தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த பழனிசாமி கும்பல்- திமுக IT Wing விமர்சனம்!
-
"மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த எந்தத் தடையும் இல்லை" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
-
"வாக்குரிமையை பறிக்கும் SIR சதித் திட்டத்திற்கு எதிராக போராடிடுவோம்" - திமுக கூட்டணிக் கட்சிகள் அழைப்பு !
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!