Tamilnadu
இன்ஸ்டாகிராமில் அறிமுகமான மூன்றே நாளில் காதலனைத் தேடி சென்ற சிறுமி பாலியல் வன்கொடுமை : அதிர்ச்சி சம்பவம்!
சென்னையைச் சேர்ந்த 17 வயது சிறுமி இன்ஸ்டாகிராம் மூலம் திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் ஊரை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பேசி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து இருவருக்கும் காதல் மலர்ந்தது.
இதை அடுத்து இன்ஸ்டாகிராமில் அறிமுகமான மூன்றே நாளில் காதலனைத் தேடி 17 வயது சிறுமி திருவள்ளுவருக்கு வந்துள்ளார் அங்கு அவரை சந்தித்த காதலன் அந்த சிறுமியை திருப்பாச்சூரில் ஊரில் உள்ள நண்பர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு தனது நண்பருடன் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்து மனவேதனையுடன் திரும்பிச் சென்ற சிறுமி சில தினங்கள் கழித்து தனது பெற்றோரிடம் இது குறித்து கூறியுள்ளார். இதை தொடர்ந்து பெற்றோர் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சித்ராதேவி இது குறித்து போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து காவல் ஆய்வாளர் (பொறுப்பு) சத்தியவாணி காதலனான 17 வயது சிறுவனை கைது செய்தார். உடன் இருந்து பாலியல் வன்கொடுமை செய்த நண்பர் தலைமறைவாகி விட்டார்.
பின்னர் சிறுவனை திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். “மொபைல் போன் மூலம் அறிமுகமாகி காதல் என்ற பெயரில் மூன்றே நாட்களில் தனது வாழ்க்கையை இழந்த சிறுமியின் சம்பவத்தை ஒரு பாடமாக எடுத்து கொண்டு, இளம் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்” என காவல் ஆய்வாளர் சத்தியவாணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Also Read
-
ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
-
“விஜய் இன்னும் அசெம்பிள் ஆகாத என்ஜின்” : திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்!
-
ஆதிதிராவிடர் பழங்குடியினர் மக்களின் நலன் காப்பதில் முன்னனி மாநிலமாக விளங்கும் தமிழ்நாடு!
-
தமிழ் மொழியுணர்வுக்கான காரணங்களைப் புரிந்துகொள்ள... ‘உயிர் நிகர் தமிழ்‘ நூல்! : முழு விவரம் உள்ளே!
-
ஊழல்வாதிகளை சுத்தம் செய்யும் 'வாஷிங் மெஷின்': பாஜக ஃபார்முலா மகாராஷ்டிர மாநிலத்தில் கிழிந்து தொங்குகிறது!