Tamilnadu
நிவர் புயல் கடந்து சென்ற சுவடு மறைவதற்குள் இன்னொரு புயல்? - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
வங்கக்கடலில் கடந்த நவம்பர் 24ம் தேதி உருவான நிவர் புயல் கரையை கடந்துள்ள நிலையில், வரும் 29ஆம் தேதி மீண்டும் புதிய புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, தென் தமிழகத்தின் மேற்குப்பகுதி நோக்கி நகர வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி அருகே இன்று அதிகாலை 2.30 மணியளவில் கரையைக் கடந்தது. இந்தப் புயலையொட்டி புதுச்சேரி, கடலூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
நிவர் புயல் கரையை கடந்து சென்ற சுவடு கூட இன்னும் மறையாத நிலையில் வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நவம்பர் 29ஆம் தேதியன்று தெற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்தடுத்த நாட்களில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிரமடைந்து தென் தமிழக பகுதிகளை நோக்கி நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை - ஜி.ராமகிருஷ்ணன் !
-
திக்கெட்டும் புகழ் பரப்பும் திராவிட நாயகர் : நாடும் ஏடும் போற்றும் 4 ஆம் ஆண்டு தொடக்கம்!
-
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !
-
”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள்கூட கிடைக்காது” : தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!
-
”தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மும்முனை மின்சாரம்” : தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!