Tamilnadu
“அழிவின் விளிம்பில் உள்ள 3,083 நீர் நிலைகளை மீட்டெடுக்கவும்” - தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் ஆணை!
தமிழகத்தில் அழிவின் விளிம்பில் உள்ள 3,083 நீர்நிலைகளை மீட்டெடுக்க தமிழக அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அனைத்து மாநிலங்களிலும் நீர்நிலைகளை பாதுகாப்பதற்கு தலைமைச் செயலாளர்கள் மேற்பார்வயில் உரிய அதிகாரிகளை நியமித்து கண்காணிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் வெளியிட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று 2015 ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கில் தேசிய பசுமைப் தீர்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதில், அனைத்து மாநிலங்களும் நீர்நிலைகள் குறித்து ஜனவரி 31ஆம் தேதி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி அவற்றைப் பாதுகாக்க உரிய தீர்வு முறைகளை வகுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 15 ஆயிரத்து 658 நீர்நிலைகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், 3,083 நீர்நிலைகள் அழிவின் விளிப்பில் இருப்பதாகவும், அவற்றை மீட்டெடுக்க வேண்டும் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
சென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெருநாய்களுக்கு தடுப்பூசி... மாநகராட்சி தகவல் !
-
”பிரதமர் மோடி பேசியது அபாண்டமானது; பேசக்கூடாதது” : ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
தெருநாய் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன... முழு விவரம் உள்ளே !
-
”ஓராண்டில் 15,500 பேர் மலையேற்றம்” : சுற்றுலாத்துறையில் முன்மாதிரியாக திகழும் தமிழ்நாடு!
-
கல்லறைத் தோட்டங்கள் - கபர்ஸ்தான்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ஆணை என்ன?