Tamilnadu
“தமிழக அரசு சூரப்பாவை சஸ்பென்ட் செய்யாதது ஏன்?”: அண்ணா பல்கலை. முற்றுகையிட்டு ‘SFI’ மாணவர்கள் போராட்டம் !
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததையடுத்து அவர் மீது விசாரணை நடத்த விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள ஒரு நபர் துணைவேந்தர் பதவியில் நீடிக்கக் கூடாது. அவ்வாறு நீடித்தால் ஆவணங்களை மறைப்பதற்கான வாய்ப்புள்ளது.
எனவே அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். சூரப்பாவை உடனடியாக தமிழக அரசு டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் கோஷம் எழுப்பினர்.
தமிழக அரசு மாணவர்கள் நலனை பாதுகாக்க வேண்டும் கல்வித்துறையை பாதுகாக்க வேண்டும் இதற்காக சூரப்பாவை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். மேலும், சூரப்பாவை விசாரிக்க ஆணையம் அமைத்த தமிழக அரசால், அவரை இடைநீக்கம் செய்ய ஆளுநரிடம் அழுத்தம் கொடுக்க முடியவில்லை ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
Also Read
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!