Tamilnadu
“தமிழக அரசு சூரப்பாவை சஸ்பென்ட் செய்யாதது ஏன்?”: அண்ணா பல்கலை. முற்றுகையிட்டு ‘SFI’ மாணவர்கள் போராட்டம் !
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததையடுத்து அவர் மீது விசாரணை நடத்த விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள ஒரு நபர் துணைவேந்தர் பதவியில் நீடிக்கக் கூடாது. அவ்வாறு நீடித்தால் ஆவணங்களை மறைப்பதற்கான வாய்ப்புள்ளது.
எனவே அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். சூரப்பாவை உடனடியாக தமிழக அரசு டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் கோஷம் எழுப்பினர்.
தமிழக அரசு மாணவர்கள் நலனை பாதுகாக்க வேண்டும் கல்வித்துறையை பாதுகாக்க வேண்டும் இதற்காக சூரப்பாவை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். மேலும், சூரப்பாவை விசாரிக்க ஆணையம் அமைத்த தமிழக அரசால், அவரை இடைநீக்கம் செய்ய ஆளுநரிடம் அழுத்தம் கொடுக்க முடியவில்லை ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
Also Read
-
“அதிமுகவை அழிக்க வேறு யாரும் தேவையில்லை.. இவரே போதும்..” எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த கருணாஸ்!
-
Fact Check : வள்ளுவருக்கு விபூதி... மீண்டும் மீண்டும்.. பொய் பரப்புவதில் பாஜகவுடன் போட்டிபோடும் அதிமுக!
-
"அரசியல் சண்டைகளுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம்" - பாஜகவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை !
-
ஆதாரை வாக்காளர் பட்டியலுக்கான ஆவணமாக ஏற்கவேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு !
-
”அ.தி.மு.க-விற்கு விரைவில் ICUதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!