Tamilnadu
போதையில் அரசு பேருந்தை கடத்திய நபர்.. 2 கி.மீ துரத்திச் சென்ற ஓட்டுநர்.. திருச்சியில் பரபரப்பு!
தீபாவளியை முன்னிட்டு மாநிலம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு இயக்கப்பட்ட கோவை கோட்ட ஈரோடு மாவட்டம் கொடுமுடி பணிமனையை சேர்ந்த அரசு பேருந்து, இன்று மதியம் கரூரிலிருந்து, திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.
அங்கு பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் சரவணகுமார், நடத்துநர் ரவி அருகில் இருந்த தேநீர் கடையில் தேநீர் குடித்துள்ளனர். அப்போது அந்த பேருந்துக்குள் ஏறிய மர்ம நபர் அரசு சிறப்பு பேருந்தை இயக்கத்தொடங்கினார்.
அரசு சிறப்பு பேருந்து கண்ணேதிரே கடத்தப்படுவதை கண்டு, ஓட்டுநரும் நடத்துநரும் கத்தியபடியே துரத்திச் சென்றிருக்கிறார்கள். கடத்தப்பட்ட பேருந்து அடுத்த இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்குள் இருந்த சிக்னலில் நின்றது.
பேருந்தையும், பேருந்தை கடந்தியவரையும், போக்குவரத்து போலிஸாரின் உதவியுடன் பிடித்தனர். இதுகுறித்து திருச்சி கண்டோன்மெண்ட் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா போதையில் இருக்கும் அந்த நபர், தன்னுடைய பெயரை அஜித் என்று தெரிவித்துள்ளார்.
Also Read
-
4 ஆண்டுகள் - ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு : இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!
-
மதுரை கோவைக்கு மெட்ரோ ரயில் புறக்கணிப்பு ஏன்? : மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய கனிமொழி NVN சோமு MP!
-
‘வந்தே மாதரம்’, ‘ஜெய்ஹிந்த்’, ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ அனைத்தும் சமம் தான்!” : சு.வெங்கடேசன் எம்.பி பேச்சு!
-
கர்நாடகாவால் மாசுப்படும் தென்பெண்ணை ஆறு : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி-க்கள் குற்றச்சாட்டு!
-
வேலைவாய்ப்புகளை உருவாக்காதது ஏன்? : மக்களவையில் ஒன்றிய அரசுக்கு தி.மு.க MPக்கள் கேள்வி!