Tamilnadu
போதையில் அரசு பேருந்தை கடத்திய நபர்.. 2 கி.மீ துரத்திச் சென்ற ஓட்டுநர்.. திருச்சியில் பரபரப்பு!
தீபாவளியை முன்னிட்டு மாநிலம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு இயக்கப்பட்ட கோவை கோட்ட ஈரோடு மாவட்டம் கொடுமுடி பணிமனையை சேர்ந்த அரசு பேருந்து, இன்று மதியம் கரூரிலிருந்து, திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.
அங்கு பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் சரவணகுமார், நடத்துநர் ரவி அருகில் இருந்த தேநீர் கடையில் தேநீர் குடித்துள்ளனர். அப்போது அந்த பேருந்துக்குள் ஏறிய மர்ம நபர் அரசு சிறப்பு பேருந்தை இயக்கத்தொடங்கினார்.
அரசு சிறப்பு பேருந்து கண்ணேதிரே கடத்தப்படுவதை கண்டு, ஓட்டுநரும் நடத்துநரும் கத்தியபடியே துரத்திச் சென்றிருக்கிறார்கள். கடத்தப்பட்ட பேருந்து அடுத்த இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்குள் இருந்த சிக்னலில் நின்றது.
பேருந்தையும், பேருந்தை கடந்தியவரையும், போக்குவரத்து போலிஸாரின் உதவியுடன் பிடித்தனர். இதுகுறித்து திருச்சி கண்டோன்மெண்ட் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா போதையில் இருக்கும் அந்த நபர், தன்னுடைய பெயரை அஜித் என்று தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!