Tamilnadu
10 நாட்களுக்கும் மேலாக முறையாக குடிநீர் விநியோகிக்காமல் வதைத்த நிர்வாகம் : பொதுமக்கள் சாலை மறியல்!
திருச்செந்தூர் அருகே முறையாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பரமன்குறிச்சி ஊராட்சியில் 2000-ற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி மக்களுக்கு எல்லப்ப நாயக்கர் குளத்திலிருந்து குடிநீர் வழங்கப் பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் வழங்கப்படாதது மக்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில் இன்று பொதுமக்கள் காலி குடங்களுடன் திருச்செந்தூர் கோவில் சாலையில் உள்ள பரமன்குறிச்சி ரவுண்டானாவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களை கலைந்து செல்லுமாறு அறிவுவறுத்தினர்.
அதற்கு பொதுமக்கள் மறுப்பு தெரிவித்ததால் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. முறையான குடிநீர் விநியோகம் வழங்க உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Also Read
-
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு.. 12 மாநிலங்களில் நடத்தப்படும் SIR.. எந்தெந்த மாநிலங்கள்? எப்போது? - விவரம் !
-
SIR-க்கு ஆதரவு : தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த பழனிசாமி கும்பல்- திமுக IT Wing விமர்சனம்!
-
"மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த எந்தத் தடையும் இல்லை" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
-
"வாக்குரிமையை பறிக்கும் SIR சதித் திட்டத்திற்கு எதிராக போராடிடுவோம்" - திமுக கூட்டணிக் கட்சிகள் அழைப்பு !
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!