Tamilnadu
10 நாட்களுக்கும் மேலாக முறையாக குடிநீர் விநியோகிக்காமல் வதைத்த நிர்வாகம் : பொதுமக்கள் சாலை மறியல்!
திருச்செந்தூர் அருகே முறையாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பரமன்குறிச்சி ஊராட்சியில் 2000-ற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி மக்களுக்கு எல்லப்ப நாயக்கர் குளத்திலிருந்து குடிநீர் வழங்கப் பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் வழங்கப்படாதது மக்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில் இன்று பொதுமக்கள் காலி குடங்களுடன் திருச்செந்தூர் கோவில் சாலையில் உள்ள பரமன்குறிச்சி ரவுண்டானாவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களை கலைந்து செல்லுமாறு அறிவுவறுத்தினர்.
அதற்கு பொதுமக்கள் மறுப்பு தெரிவித்ததால் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. முறையான குடிநீர் விநியோகம் வழங்க உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!