Tamilnadu
“வாக்கு எண்ணிக்கையின் போதும் குளறுபடிகளில் ஈடுபடலாம்” : ‘BJP -JUD’ சதியை முறியடிக்க RJD கூட்டணி திட்டம்!
நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில், வாக்களித்து விட்டு வெளியேவரும் வாக்காளர்களிடம் கருத்துக்கேட்கும் பணியில் 6 ஊடகங்கள் குழு ஈடுபட்டிருந்தன. இந்த 6 குழுவினருமே ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணியே அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று கூறியிருக்கின்றன.
நவம்பர் 10 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த கருத்துக்கணிப்புகள் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கடுமையான முறையில் வீழ்ச்சியடையும் என்று கூறுகின்றன.
குறிப்பாக, சி.என்.என். நியூஸ் 18, டுடே, சாணக்யா உள்ளிட்ட ஊடகங்கள் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், மகாகத்பந்தன் கூட்டணி 44 சதவீத வாக்குகளைப் பெற்று, 180 இடங்களைக் கைப்பற்றும் என்றுதெரிவித்துள்ளனர்.
அதேப்போன்று பா.ஜ.க கூட்டணி 34 சதவீத வாக்குகளைப் பெற்று 55 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என்றும் கூறியிருக்கிறது. இதனால் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்ய காங்கிரஸ் மேலிட பார்வையாளர்களை சோனியா காந்தி பாட்னாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
குறிப்பாக, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் ஆர்.ஜே.டி கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்பதாலும், வாக்கு எண்ணிக்கையின் போதும் அதன் பின்னரும் பா.ஜ.க, ஜே.டி.யு கட்சிகள் ஏதேனும் குளறுபடிகளில் ஈடுபடலாம் என்பதால் நிலமையக் கவனிக்க டெல்லியிலிருந்து ரந்தீப்சிங் சுர்ஜேவாலா, அபிலாஷ் பாண்டே ஆகியோரை சோனியாகாந்தி பாட்னாவுக்கு அனுப்பியுள்ளார்.
பா.ஜ.க., ஜே.டி.யு கூட்டணிகள் தேர்தல் வெற்றி பெற என்ன வேண்டுமாலும் குளறுபடிகளில் ஈடுபடும். அதனைத் தடுக்க ஆர்.ஜே.டி தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
Also Read
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !