Tamilnadu
மளிகைக்கடை போர்வையில் குட்கா குடோன் : கேளம்பாக்கத்தில் மூட்டை மூட்டையாக சிக்கிய குட்கா - 2 பேர் கைது!
சென்னை அடையாறு துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அடையாறு காவல் சரகத்தில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து தொடர்ந்து கைது நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை திருவான்மியூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் கடைகளுக்கு ஹான்ஸ், கூல் லிப், பாக்கு உள்ளிட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்து வருவதாக தனிப்படை போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருவான்மியூர் பகுதியில் மாறு வேடத்தில் நோட்டமிருந்த வேளையில் டி.வி.எஸ் எக்ஸ்.எல் பைக்கில் ஒருவர் குட்கா பொருட்களுடன் கடைகளுக்கு விற்பனை செய்து வருவதை கண்ட போலிஸார் அவரைப் பிடித்து அவரிடமிருந்த 50-லோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஆசிப் (19) என்பதும், அவர் கேளம்பாக்கம் அருகே மளிகை கடை நடத்தி வரும் அம்சா ராஜா (41) என்பவரிடமிருந்து குட்கா பொருட்களை வாங்கி கடைகளுக்கு விற்பனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக கேளம்பாக்கத்துக்கு விரைந்த தனிப்படை போலிஸார் அம்சா ராஜாவை கைது செய்து அவர் மளிகை கடை அருகே உள்ள குடோனில் பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றினர். மளிகை கடை போர்வையில் குடோனாக மாற்றி குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்த ஆசிப், அம்சா ராஜா ஆகிய இருவரை கைது செய்த போலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
Also Read
-
“3 ஃபைல் இருக்குனா வெளியிட வேண்டியதுதானா.. கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லை” - செந்தில் பாலாஜி காட்டம்!
-
இடதுசாரிகளா? அதிகாரிகளா? யார் வேண்டும் : முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய பெ.சண்முகம்!
-
‘மகளைக் காதலித்ததால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. கூலிப்படையை ஏவி தவெக நிர்வாகியின் வெறிச்செயல்’
-
நெஞ்சத்தைக் கனக்கச் செய்கின்றன : உதவியாளராகப் பணியாற்றிய ஹரிகிருஷ்ணன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
“Comeback கொடுப்பதில் நாம் Specialist.. புதுமுகங்களுக்கு பொறுப்பு” : செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!