Tamilnadu
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாகத் தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு மிகக் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென் தமிழகத்தில் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாகக் கடந்த வாரத்தில் மட்டும் தமிழகத்தில் ஓரளவிற்கு நல்ல மழை பெய்தது.
இந்த நிலையில் வெப்பச் சலனம் காரணமாகத் தமிழகத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது,
சென்னை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை மைய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
”போராடி பெற்ற நமது உரிமைகளை பறிக்கும் மோடி அரசு” : தீஸ்தா சீதல்வாட் குற்றச்சாட்டு!
-
"திறமையற்ற தலைவர் மோடி" - இந்திய பயணத்தை ஒத்திவைத்து சீன பிரதமரை சந்திக்க சென்ற எலான் மஸ்க் !
-
”பொய் மட்டுமே பேசும் ஒரே தலைவர்” : பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி!
-
”தேர்தல் ஆணையம் மீதே சந்தேகங்கள் அதிகம் இருக்கு” : முரசொலி தலையங்கம் சொல்வது என்ன?
-
"டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற நடராஜன் தகுதியானவர்"- ஜாம்பவான் வீரர் கருத்து !