Tamilnadu

சென்னையில் மீண்டும் ஆயிரத்துக்கு குறைவாக பதிவான கொரோனா பாதிப்பு - தமிழகத்தில் தொற்றின் நிலை? #Corona

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையின்படி இன்று 5,892 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,45,851 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 82,901 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 50 லட்சத்து 47 ஆயிரத்து 42 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 968 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. பல நாட்களுக்குப் பிறகு சென்னையில் இன்று ஆயிரத்துக்கு குறைவாக பாதிப்பு பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 1,38,724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையை தவிர்த்து, கோவையில் 593 பேருக்கும், கடலூரில் 590 பேருக்கும், செங்கல்பட்டில் 378 பேருக்கும், திருவள்ளூரில் 358 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 6,110 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 86 ஆயிரத்து 173 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 52,070 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 92 பேர் உயிரிழந்தனர். அதில், 34 பேர் தனியார் மருத்துவமனையிலும், 58 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 7,608 ஆக அதிகரித்துள்ளது.

Also Read: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மோடி அரசு படுதோல்வி: இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 83,883 பேர் பாதிப்பு!