Tamilnadu
அரசு நிர்ணயித்ததை விட அதிக விலைக்கு மதுபானம் விற்பனை : மது கூட கட்டிட உரிமையாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு!
அரசு நிர்ணயித்த விலையை விட டாஸ்மாக் கடைகளில் அதிகப்படியான விலைக்கு மதுபானம் விற்பதாக தமிழ்நாடு மது கூட கட்டிட உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு மது கூட கட்டிட உரிமையாளர்கள் மற்றும் மது கூட ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின் தலைவர் அன்பு செல்வன் கூறுகையில், “தமிழ்நாடு மது கூட கட்டிட உரிமையாளர்கள் மற்றும் மது கூட ஒப்பந்ததாரர்கள் நல சங்கம் சார்பில் டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரிடம் மனு அளிக்கப்பட்டது.
அதில், கடந்த மார்ச் 16 ஆம் தேதி முதல் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஆறு மாத காலமாக பொதுக் கூட்டத்தின் வாயிலாக வர வேண்டிய இட வாடகை வராமல் உள்ளது.
மது பிரியர்கள் வருகையும் குறைந்துள்ளதால் இதற்கு மேலும் மது கடைகளை கட்டிட உரிமையாளர்கள் நடத்துவதா வேண்டாமா என்று ஆலோசித்து வருகின்றனர். அதேபோல் தமிழகம் முழுவதும் அரசாங்கம் நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூபாய் 20 முதல் 40 வரை மது கடையிலேயே விற்கப்படுவதால் கடை வாயிலில் பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஆந்திராவில் ரூ.2000 கோடி பணத்துடன் சிக்கிய கண்டெய்னர்கள்: இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி - விவரம் என்ன ?
-
போதை பொருள்வழக்கு : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறவினர் வீட்டில் அதிரடி சோதனை !
-
ஹரியானாவில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொடரும் எதிர்ப்பு : துரத்தியடித்த பொதுமக்கள் !
-
பேட்டிங்கில் சொதப்பிய CSK : பஞ்சாப் அணி அபார வெற்றி... சென்னையில் பிளே ஆஃப் வாய்ப்புக்கு சிக்கல் !
-
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து விவாதிக்க தயாரா? : மோடிக்கு மீண்டும் மல்லிகார்ஜூன கார்கே கடிதம்!