Tamilnadu
அரசு நிர்ணயித்ததை விட அதிக விலைக்கு மதுபானம் விற்பனை : மது கூட கட்டிட உரிமையாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு!
அரசு நிர்ணயித்த விலையை விட டாஸ்மாக் கடைகளில் அதிகப்படியான விலைக்கு மதுபானம் விற்பதாக தமிழ்நாடு மது கூட கட்டிட உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு மது கூட கட்டிட உரிமையாளர்கள் மற்றும் மது கூட ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின் தலைவர் அன்பு செல்வன் கூறுகையில், “தமிழ்நாடு மது கூட கட்டிட உரிமையாளர்கள் மற்றும் மது கூட ஒப்பந்ததாரர்கள் நல சங்கம் சார்பில் டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரிடம் மனு அளிக்கப்பட்டது.
அதில், கடந்த மார்ச் 16 ஆம் தேதி முதல் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஆறு மாத காலமாக பொதுக் கூட்டத்தின் வாயிலாக வர வேண்டிய இட வாடகை வராமல் உள்ளது.
மது பிரியர்கள் வருகையும் குறைந்துள்ளதால் இதற்கு மேலும் மது கடைகளை கட்டிட உரிமையாளர்கள் நடத்துவதா வேண்டாமா என்று ஆலோசித்து வருகின்றனர். அதேபோல் தமிழகம் முழுவதும் அரசாங்கம் நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூபாய் 20 முதல் 40 வரை மது கடையிலேயே விற்கப்படுவதால் கடை வாயிலில் பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?