Tamilnadu
அரசு நிர்ணயித்ததை விட அதிக விலைக்கு மதுபானம் விற்பனை : மது கூட கட்டிட உரிமையாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு!
அரசு நிர்ணயித்த விலையை விட டாஸ்மாக் கடைகளில் அதிகப்படியான விலைக்கு மதுபானம் விற்பதாக தமிழ்நாடு மது கூட கட்டிட உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு மது கூட கட்டிட உரிமையாளர்கள் மற்றும் மது கூட ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின் தலைவர் அன்பு செல்வன் கூறுகையில், “தமிழ்நாடு மது கூட கட்டிட உரிமையாளர்கள் மற்றும் மது கூட ஒப்பந்ததாரர்கள் நல சங்கம் சார்பில் டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரிடம் மனு அளிக்கப்பட்டது.
அதில், கடந்த மார்ச் 16 ஆம் தேதி முதல் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஆறு மாத காலமாக பொதுக் கூட்டத்தின் வாயிலாக வர வேண்டிய இட வாடகை வராமல் உள்ளது.
மது பிரியர்கள் வருகையும் குறைந்துள்ளதால் இதற்கு மேலும் மது கடைகளை கட்டிட உரிமையாளர்கள் நடத்துவதா வேண்டாமா என்று ஆலோசித்து வருகின்றனர். அதேபோல் தமிழகம் முழுவதும் அரசாங்கம் நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூபாய் 20 முதல் 40 வரை மது கடையிலேயே விற்கப்படுவதால் கடை வாயிலில் பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!