Tamilnadu
சென்னையில் உச்சமடையும் கொரோனா பரவல் : இன்று 1,270 பேர் பாதிப்பு; பிற மாவட்டங்களில் 4,681 பேருக்கு கொரோனா!
தமிழகத்தில் இன்று மேலும் 5,951 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து மொத்தமாக இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.91 லட்சத்து 303 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் இன்று 1,270 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் 1 லட்சத்து 27 ஆயிரத்து 949 ஆக மொத்த பாதிப்பு அதிகரித்துள்ளது.
பிற மாவட்டங்களில் மட்டுமே இன்று 4,681 பேர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அதிகபட்சமாக கடலூரில் 370, செங்கல்பட்டில் 321, கோவையில் 320, திருவள்ளூரில் 305, சேலத்தில் 297, தேனியில் 226, காஞ்சியில் 214, நெல்லையில் 204 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கொரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 107 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மொத்தமாக பலியானோரின் எண்ணிக்கை 6,721 ஆக அதிகரித்துள்ளது.
ஆனால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 3லட்சத்து 32 ஆயிரத்து 454 ஆக உள்ளது. அதன்படி, இன்று கொரோனாவில் இருந்து 6,998 பேர் மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதனையடுத்து தற்போது 52 ஆயிரத்து 128 பேருக்கு கொரோனா சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
Also Read
-
“திருக்குறளை தேசிய நூலாக ஆக்க வேண்டும்!” : உலகப் பொதுமறையை பறைசாற்றிய முரசொலி தலையங்கம்!
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?
-
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்.. சென்னையில் முகாம்கள் நடைபெறும் நாள், இடங்கள் என்ன?- முழு விவரம் உள்ளே!
-
கடலூர், சிதம்பரம் மக்கள் கவனத்துக்கு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்ன ?
-
துணை வேந்தர் விவகாரம்... ஆளுநரின் நியமனம் செல்லாது : மீண்டும் மீண்டும் கொட்டுவைத்த உயர்நீதிமன்றம் !