Tamilnadu
சென்னையில் 29வது மாடியின் வெளிப்புற விளிம்பில் நடந்த சிறுமி... போலிஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய காரணம்!
சென்னை அருகே அடுக்குமாடி குடியிருப்பின் 29வது மாடியின் பக்கவாட்டில் சிறுமி நடந்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் நாவலூர் சுங்கச்சாவடி அருகே ஏகாட்டூரில் உள்ள மிக அதிக உயரம் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 29வது மாடியின் பக்கவாட்டு விளிம்பில் சிறுமி ஒருவர் உயிரைப் பணயவைத்து நடந்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிறுமி 29வது மாடியின் பக்கவாட்டு விளிம்பில் நடந்து செல்லும் காட்சியை அருகில் உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் தங்களது செல்போனில் பதிவு செய்துள்ளனர்.
அந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து, கேளம்பாக்கம் போலிஸார் அடுக்குமாடி குடியிருப்பிற்கு சென்று விசாரணையை நடத்தினர்.
அப்போது அங்கு வசித்து வரும் ஒரு தம்பதியினரின் 15 வயது மகள்தான், தனது அண்ணன் பந்தயம் கட்டியதற்காக உயிரை பணையம் வைத்து 29வது மாடியின் பக்கவாட்டில் நடந்து சென்றது விசாரணையில் தெரியவந்தது.
இதைக் கேட்டு போலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து யாரும் புகார் அளிக்கவில்லை என்பதால் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
வாகை சூடிய வடக்கு மண்டல சந்திப்பு; கலைஞைரின் கொள்கைப் பேரன் என்பதை செயலால் நிரூபித்து வரும் உதயநிதி!
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!
-
“மெட்ரோ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு!”: திமுக எம்.பி கிரிராஜன் கண்டனம்!