Tamilnadu
“மாநில ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு பாலியல் தொல்லை” : போக்சோ சட்டத்தின் கீழ் பயிற்சியாளர் கைது!
சென்னை கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டில் வசித்து வருபவர் தொழிலதிபரின் 13 வயதான மகள் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் விளையாட்டு வீராங்கனையான சிறுமிக்கு உடற்பயிற்சி கொடுப்பதற்காக கடந்த 10ம் தேதி திருவொற்றியூரில் இருந்து மகேஷ் என்பவர் வந்துள்ளார்.
அப்போது பயிற்சியின் போது உடலில் கை வைத்து சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டுள்ளார். சிறுமியின் அலரல் சத்தத்தால் பயந்து அங்கிருந்து மகேஷ் ஓடியுள்ளார்.
இதனையடுத்து சிறுமி தந்தையிடம் கூட, சிறுமியின் தந்தை ஆன்லைன் வாயிலாக அடையார் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் தலைமறைவாக இருந்த மகேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் குற்றங்களை தடுக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என குழந்தைகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!