Tamilnadu
“வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு மிரட்டும் அ.தி.மு.க நிர்வாகி” - போலிஸில் புகார் அளித்த பெண் வியாபாரி!
சென்னை சாலிகிராமம் எஸ்.கே.பாபு தெருவைச் சேர்ந்தவர் சுசீலா. இவர் ஆற்காடு சாலையில் தள்ளுவண்டியில் சூப் வியாபாரம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 9ம் தேதி இரவு 7 மணியளவில் இவரது கடைக்கு சாலிகிராமம், தசரதபுரம் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.கவின் இளைஞர் - இளம்பெண்கள் பாசறை நிர்வாகி குமார் என்பவர் வந்துள்ளார். அப்போது, “இந்தப் பகுதில் எந்த கடை போடவேண்டுமென்றாலும் எங்கள் அனுமதி பெற்று, எங்களை ‘கவனித்தால்’ மட்டுமே கடை போட முடியும். இல்லையென்றால் இங்கு கடை நடத்தமுடியாது” என்று மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் யாருக்கும் பணம் தரும் நிலைமையில் தான் இல்லை என்றும் மாமூல் தரமுடியாது என்றும் கூறவே, “நான் நாளை வரும்போது இங்கு கடை இருக்கக்கூடாது” என மிரட்டிவிட்டுச் சென்றுள்ளார்.
இதனையடுத்து சுசீலா தன்னிடம் மாமூல் கேட்டு அ.தி.மு.க இளைஞர் - இளம்பெண்கள் பாசறை நிர்வாகி குமார் என்பவர் மிரட்டுவதாக விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
”கொஞ்சம் கூட கருணை இல்லாத மோடி அரசு” : செல்வப்பெருந்தகை விமர்சனம்!
-
”தமிழ்நாடு மீது பா.ஜ.கவுக்கு இருப்பது கோபம் அல்ல தீராத வன்மம்” : சு.வெங்கடேசன் ஆவேசம்!
-
யானை பசிக்கு சோளப்பொறியா? : தமிழ்நாடு கேட்டது ரூ.38,000 கோடி - ஒன்றிய அரசு கொடுத்தது ரூ.275 கோடி!
-
NDA அரசாக மாறிய மோடி அரசு... பாஜக பிரசாரத்தில் வியக்கத்தக்க மாற்றம்... தோல்வி பயத்தில் தவழும் பாஜக!
-
“கோடை காலத்தில் குடிநீர் கிடைக்க அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும்” - முதலமைச்சர் உத்தரவு!