Tamilnadu
குழந்தைய குப்பைக் கூடையில் அமர வைத்து பணி செய்த தூய்மை பணியாளர் - மனம் கனக்கும் சம்பவம்!
திருப்பூர் மாநகராட்சியில் பெண் தூய்மை பணியாளர் ஒருவர் தனது குழந்தையை, குப்பை எடுத்துச் செல்லும் கூடையில் அமர வைத்து பணி செய்து வந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சுஜா என்ற அந்த பெண், திருப்பூரில் தூய்மை பணியாளராக பணி செய்து வருகிறார். இவருடைய 3 வயது மகளை கவனித்துக் கொள்ள ஆளில்லாததால், தன்னுடனேயே அழைத்துச் சென்றுள்ளார். குப்பைகளை சேகரிக்கும் தள்ளு வண்டியில் உள்ளை பிளாஸ்டிக் கூடையில் குழந்தையை அமர வைத்து பணியை மேற்கொண்டுள்ளார்.
இந்த காட்சி காண்போரின் மனதை கனக்கச் செய்துள்ளது. கொரோனா காலத்தில் துப்புரவு பணியாளர்களை பெயரளவில் மட்டுமே போற்றும் அரசு, உண்மையில் அவர்களுக்கான அடிப்படை வசதிகளையும், பாதுகாப்பு தேவைகளையும் ஏற்படுத்தி தருவதில்லை.
புகைப்படத்தில் காணப்படும் சுஜா, மாஸ்க், கையுரை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் இல்லாமல் பணி செய்து வருகிறார். குழந்தையும் குப்பையில் அமர்ந்திருக்கிறது. தூய்மை பணியாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும், போதிய பாதுகாப்பு செய்து தராத திருப்பூர் மாநகராட்சிக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.
Also Read
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
-
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! : மாவட்ட தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?