Tamilnadu
அடுத்த 2 நாட்களுக்கு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னையில் லேசான மழை பெய்யும் - வானிலை அப்டேட்!
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், புதுவை, காரைக்கால் மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதே போல, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, கோவை, நீலகிரி, நாமக்கல், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், தஞ்சாவூர், திருவாரூர், புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என வானிலை மையம் தகவலளித்துள்ளது.
இந்த இரண்டு நாட்களில் ஜூன் 28ம் தேதியன்று சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஜூன் 29ம் தேதி சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், நீலகிரி, கோவை, தேனி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் திருச்சி மாவட்டம் மருங்காபுரி, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் 3 செ.மீ மழையும்., திருச்சி மாவட்டம் கோவில்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, பொன்னமராவதி மற்றும் காரையூர், அரியலூர் மாவட்டம் திருமனூர், கன்னியாகுமரி மாவட்டம் சித்தார், தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் பகுதியில் 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்ச வெப்ப நிலையாக 29 டிகிரி செல்சியஸும் பதிவாகும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தென்கிழக்கு அரபிக்கடல், மாலத்தீவு, கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் இன்று சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
Also Read
-
“தமிழ் மீனவர்களை கைவிடும் ஒன்றிய அரசு!” : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்கள் கண்டனம்!
-
திருவண்ணாமலையில் 33 ஏக்கர் பரப்பளவில் ‘மு.க.ஸ்டாலின் பூங்கா’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
”திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக மாற்ற பார்க்கிறது பா.ஜ.க” : கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!
-
“தமிழ்நாடுதான் Electronics துறையின் Capital” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மதுரை மீது பா.ஜ.க.வுக்கு ஏன் இத்தனை வன்மம்? : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சரமாரி கேள்வி!