Tamilnadu
வீட்டு வேலை பார்த்து வந்த சிறுமிக்கு ஒரு வருடமாக பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் தொழிலதிபர் கைது!
சென்னை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த 54 வயதானவர் பால்ராஜ். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் பாட்டியுடன் வசித்து வரும் 15 வயது சிறுமி ஒருவர் தனது படிப்பை பாதியில் முடிந்த நிலையில், வறுமையின் காரணமாக பால்ராஜ் வீட்டில் வேலைகளை செய்து வந்துள்ளார்.
வீட்டில் வேலை செய்துவந்த சிறுமிக்கு பால்ராஜ் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த விவகாரத்தை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டி கடந்த ஒரு வருடமாக பாலியல் தொல்லைக் கொடுத்து வந்துள்ளார் பால்ராஜ்.
சிறுமியும் பயத்தில் வெளியே சொல்லாமல் பரிதவித்து வந்த நிலையில், பால்ராஜின் பாலியல் சேட்டைகள் ஒருகட்டத்தில் அத்துமீறி சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சிறுமி தனது பாட்டியிடம் சென்று நடந்ததைக் கூறியுள்ளார்.
சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பாட்டி அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றதடுப்பு பிரிவு போலிஸார் வழக்குப் பதிவு செய்து பால்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“Online, Offline இண்டிலும் தி.மு.க தான் Lion என்று காட்டுவோம்!” : IT Wing கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு!
-
“அச்சுறுத்தல்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு பயப்பட மாட்டார்” : கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படைத்துள்ள “ததும்பும் தமிழ்ப் பெருமிதம்” நூல்!
-
எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு திராவிட மாடல் 2.O அமையும்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“என்னை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!