Tamilnadu
குடும்பத்தோடு 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் உத்தரவு ஏன்? - கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்!
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பரிசோதனை மையங்களில் பரிசோதனை மேற் கொள்பவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் 14 நாட்கள் தனிமைப்படுத்த படுவார்கள் என்னும் மாநகராட்சி ஆணையரின் அறிவிப்பு மக்களை அச்சம் அடைய செய்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பரிசோதனை மையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டால் அந்த நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நேற்று சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்திருந்தார்.
மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாதது உட்பட பல்வேறு மருத்துவப் பிரச்சினைகள் நிலவி வரும் நிலையில் மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு மக்களை கொரோனா பரிசோதனை மீதான அச்சத்தை அதிகரிக்கும் எனவும் மாநகராட்சியில் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இதனால் நோயை கட்டுப்படுத்த முடியாது என்றும் மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு தமிழக அரசின் கொள்கையா என விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் இந்த அறிவிப்பினால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Also Read
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
-
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு!