Tamilnadu
குடும்பத்தோடு 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் உத்தரவு ஏன்? - கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்!
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பரிசோதனை மையங்களில் பரிசோதனை மேற் கொள்பவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் 14 நாட்கள் தனிமைப்படுத்த படுவார்கள் என்னும் மாநகராட்சி ஆணையரின் அறிவிப்பு மக்களை அச்சம் அடைய செய்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பரிசோதனை மையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டால் அந்த நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நேற்று சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்திருந்தார்.
மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாதது உட்பட பல்வேறு மருத்துவப் பிரச்சினைகள் நிலவி வரும் நிலையில் மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு மக்களை கொரோனா பரிசோதனை மீதான அச்சத்தை அதிகரிக்கும் எனவும் மாநகராட்சியில் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இதனால் நோயை கட்டுப்படுத்த முடியாது என்றும் மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு தமிழக அரசின் கொள்கையா என விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் இந்த அறிவிப்பினால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!