Tamilnadu
அத்தியாவசிய பொருட்களுடன் வரும் வண்டிகளில் கறாராக பணம் பறிக்கும் சுங்கச்சாவடிகள் - வாகன ஓட்டிகள் புலம்பல்!
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும், சுங்கச்சாவடிகள் செயல்பட அனுமதியளித்து, அத்தியாவசிய தேவைகளுக்காகச் செல்வோரை வதைத்து வருகிறது அரசு.
மக்களை துயருக்குள்ளாக்கும் பேரிடர் காலத்திலும் சுங்கச்சாவடிகளை திறக்க அனுமதித்ததோடு சில சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணமும் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர்.
மதுரையில் இருந்து மேலூருக்கு TATA Ace வாகனத்தில் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்லும் ஒருவர், சிட்டம்பட்டியில் உள்ள டோல்கேட்டை கடக்கும் ஒவ்வொரு முறையும் 85 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும். அதுவே இருவழிப்பாதைக்கும் சேர்த்து முன்பே கட்டணம் செலுத்தினால், 130 ரூபாய் செலுத்தினால் போதும். இதன் மூலம் 40 ரூபாயை மிச்சப்படுத்த முடியும்.
ஆனால், ஃபாஸ்டேக் முறைக்கு மாறாத வாகனங்களிடம் இருவழிக் கட்டணம் வசூலிக்க முடியாது என்று இந்த ஊரடங்கிலும் கெடுபிடி காட்டுகிறார்கள் சுங்கச்சாவடி ஊழியர்கள். இதனால், ஒவ்வொரு முறையும் கூடுதலாக 40 ரூபாய் அதிகமாகிறது.
தமிழகத்தில் சுங்கச்சாவடி விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை. 60 கி.மீட்டருக்கு ஒரு டோல்கேட் எனும் விதி கடைபிடிக்கப்படாமல் சட்டவிரோதமாக வாகன ஓட்டிகளிடம் பணம் பறிக்கப்படுகிறது.
சுங்கச்சாவடி கட்டணங்களால், அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு மக்களிடம் விற்கப்படுகின்றன. கொரோனா கொடுந்துயர் காலத்திலும் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்வோர் கடும் சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.
Also Read
-
தமிழ்நாடு காவல்துறைக்கு ரூ.122.19 கோடியில் புதிய கட்டடங்கள்.. 360 புதிய வாகனங்கள்! : முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் ரூ.3,510 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம்! : MoU கையெழுத்தானது!
-
இளம் அரசு பணியாளர்கள் : 9801 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“தமிழ்நாட்டின் எதிர்காலம் இளம் அரசுப் பணியாளர்களிடம் தான் இருக்கிறது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.5000 பஞ்சாமிர்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு!