Tamilnadu
கொரோனா கண்காணிப்பு முகாமிலிருந்து தப்பி காதலியைச் சந்தித்த இளைஞர் - மதுரை அருகே விபரீதம்! #CoronaAlert
கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பாதிக்கட்டோரின் எண்ணிக்கை 716 ஆக உயர்ந்துள்ளது.
இதையொட்டி, நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கொரோனா சிகிச்சைக்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருகிறது. அதன்படி தமிழக அரசு சார்பில், மாவட்டந்தோறும் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக தனி வார்டுகள் அமைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களின் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் கண்காணிப்பில் இருந்த நபர் தப்பி ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் துபாயில் இருந்து மும்பைக்கு வந்து விமானம் மூலம் கடந்த 21ம் தேதி மதுரை வந்தடைந்தார். மதுரையில் சோதனை செய்யப்பட்ட பிறகு தனிமைப்படுத்தப்பட்டு மதுரை சின்ன உடைப்பு பகுதியில் உள்ள கொரோனா கண்காணிப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பதால் அங்கு தனி வார்டில் சிகிச்சைப் பெற்றுவந்த அந்த இளைஞர் இன்று அதிகாலை அங்கிருந்து தப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முகாமைச் சேர்ந்த மருத்துவர்கள் அவனியாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரைப் பெற்றுகொண்ட போலிஸார் தப்பியோடிய இளைஞரை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். விசாரணையில், அந்த இளைஞர் தனது காதலியைப் பார்க்கச் சென்றிருப்பதாகத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காதலி வீட்டில் பதுங்கி இருந்த இளைஞரை மருத்துவர்கள் உதவியுடன் கைது செய்து ஆம்புலன்ஸ் மூலம் மதுரைக்கு கொண்டு வந்தனர். இதனையடுத்து இளைஞர் பதுங்கியிருந்த அவரது காதலியின் வீட்டைத் தனிமைப்படுத்தவும் கண்காணிக்கவும் சிவகங்கை மாவட்ட சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Also Read
-
“எத்தனை விருது கிடைத்தாலும், தமிழக அரசின் விருதுகளான ‘தாயின் முத்தத்திற்கு’ ஈடாகாது!” : உதயநிதி பேச்சு!
-
தமிழ்நாடு அரசின் 7 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள்! : முழு விவரம் உள்ளே!
-
“எடப்பாடி பழனிசாமியின் வாயை, நம் முதலமைச்சர் இன்றைக்குத் தைத்துவிட்டார்!” : அமைச்சர் ரகுபதி!
-
தமிழ்நாடு காவல்துறைக்கு ரூ.122.19 கோடியில் புதிய கட்டடங்கள்.. 360 புதிய வாகனங்கள்! : முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் ரூ.3,510 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம்! : MoU கையெழுத்தானது!