Tamilnadu
“ஆளில்லாமல் நடுரோட்டில் தன்னந்தனியாகச் சென்ற ஆட்டோ” : ஓட்டுநருக்கு நேர்ந்த அவலம் - அதிர்ச்சி தகவல்! VIDEO
சென்னை தாம்பரத்தை அடுத்த சோமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் தாம்பரத்தில் இருந்து சவாரி ஏற்றிக்கொண்டு சென்னைக் கொரட்டூரில் இறக்கிவிட்டு தாம்பரத்திற்த் திரும்பியுள்ளார்.
அப்போது மதுரவாயல் 200 அடி சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது தீடிரென அவருக்கு மாடைப்பு ஏற்பட்டு ஆட்டோவில் இருந்து சாலையில் விழுந்துள்ளார். இதனால், ஆட்டோ சிறிது தூரம் ஆளில்லாமலேயே கட்டுப்பாட்டை இழந்து சென்றுள்ளது. இதனைக்கண்டு அப்பகுதி மக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இந்தக் காட்சி அங்குள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
162 அடுக்குமாடி குடியிருப்பு முதல் பெண்களுக்கான Gym வரை... கொளத்தூரில் இடைவிடாது சுற்றி சுழன்ற முதல்வர்!
-
கொளத்தூரில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம் : 2 இறகுப்பந்து ஆடுகளங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் என்ன?
-
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!