Tamilnadu
மு.க.ஸ்டாலின் அறிக்கை எதிரொலி: மின்வாரிய பணிக்கான ஆன்லைன் தேர்வு தமிழிலேயே நடத்தப்படும் என அறிவிப்பு!
மின்வாரியப் பணிகளுக்கான ஆன்லைன் தேர்வு ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து ஆன்லைன் தேர்வு தமிழில் நடத்தப்படும் என்று தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் ஆயிரத்து 300 மின் கணக்கீட்டாளர்கள் மற்றும் 500 இளநிலை உதவியாளர் பதவிகளுக்கான ஆன்லைன் தேர்வு ஆங்கிலத்தில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார்.
கிராமப்புற இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாழ்படுத்தும் திட்டமிட்ட சதி என்று மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியிருந்தார். எனவே, கிராமப்புற பட்டதாரிகளும், நகர்ப்புறங்களில், ஏழ்மையான சூழ்நிலையில் பட்டப் படிப்புகளை முடித்துள்ள இளைஞர்களும், மின் வாரிய தேர்வில் பங்கேற்று வெற்றி பெறும் வகையில், ஆன்லைன் தேர்வினை முழுமையாகத் தமிழில் நடத்திட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், கணக்கீட்டாளர் , உதவியாளர் பணிக்கான ஆன்லைன் தேர்வு தமிழ் வழியில் நடத்தப்படும் என்று தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை சமர்பிக்க மார்ச் 23-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்திய காவல்துறை: தமிழ்நாட்டில் முக்கிய குற்றங்கள் குறைந்தது: அதிகாரிகள் தகவல்!
-
வெளியானது ஐபிஎல் 2026 முதற்கட்ட அட்டவணை… El Clasico CSK vs MI போட்டிகள் இல்லையா? - முழு விவரம்!
-
“மீனவர்கள் கைதில் மெத்தனமாக இருப்பது ஏன்?” -நாடாளுமன்றத்தில் தி.மு.க MP-க்களின் அனல் பறந்த கேள்விகள்!
-
ரூ.35.45 கோடி மதிப்பில் முன்னாள் படைவீரர்கள் விடுதி, பயிற்சி மையக் கட்டடம்: அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!