Tamilnadu
கிராமங்களில் அதிகரித்து வரும் சர்க்கரை நோய்... காரணம் என்ன? - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் !
நவீன காலத்தில் சர்க்கரை நோய் எனும் நீரிழிவு நோயை (DIABETICS) ஃபேஷனாக நினைக்கக்கூடிய அளவுக்கு அவ்வளவு எளிதாக மக்களிடையே அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் 50 வயதைக் கடந்தவர்களுக்கு மட்டுமே வந்த இந்த நீரிழிவு நோயால் தற்போது 30 வயதைக் கடந்தவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதேவேளையில் நகரங்களில் மட்டுமே பரவலாக இருந்த இந்த சர்க்கரை நோய் தற்போது கிராமப்புறங்களிலும் தொடர ஆரம்பித்துள்ளது. இது தொடர்பாக ஸ்காட்லாந்தைச் சேர்ந்த Dundee பல்கலைக்கழகத்துடன் இணைந்து மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை மேற்கண்ட ஆய்வு குறித்து சென்னையில் நடந்த கருத்தரங்கில் பகிர்ந்தது.
அதில், செங்கல்பட்டு சூனாம்பேடு பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 25 கிராமங்களில் வீடு வீடாகச் சென்று நீரிழிவு நோய் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளிவந்தது. 2006ம் ஆண்டு வெறும் 4.9 சதவிகிதமாக அந்த கிராமங்களில் இருந்த நீரிழிவு பாதிப்பு 2011ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 13.5 ஆக உயர்ந்திருக்கிறது.
இதற்கு முழுமுதற் காரணம் காய்கறி, பழங்கள் என எதையும் எடுத்துக்கொள்ளாமல், அரிசி சாதம் மட்டுமே சாப்பிடுவதும், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதுமே என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நீரிழிவு நோய் இருப்பதை அறிந்ததும் ஆரம்பகட்டத்திலேயே அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டால் குணப்படுத்தலாம். இல்லையெனில் சிக்கலுக்கே வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுப்பதோடு, மாவுச்சத்துகள் குறைந்த உணவுகளை உட்கொள்ளும்படி அறிவுறுத்துகின்றனர்.
Also Read
-
"தலைமை நீதிபதி மீதான தாக்குதலில் சமூகத்தின் ஆதிக்க மனப்பான்மையை காட்டுகிறது" - முதலமைச்சர் கண்டனம் !
-
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நோக்கி செருப்பு வீச்சு... பின்னணியில் சனாதனம் - முழு விவரம் உள்ளே !
-
திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு! : விவரம் உள்ளே!
-
ரூ.209.18 கோடியில் 20 சமூகநீதி விடுதிகள், 37 பள்ளிக் கட்டடங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“‘ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை’ இந்தி மொழிபெயர்ப்பு நூல்!” : முதலமைச்சர் வெளியிட்டார்!