Tamilnadu
பள்ளிக்கு அருகே பெட்ரோல் பங்க் அமைக்க எதிர்ப்பு - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயின்ட் மெரிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி கடந்த 1989ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், இப்பள்ளி அமைந்திருக்கும் இடத்திற்கு அருகே, ஹிந்துஸ்தான் பெட்ரொலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, மாவட்ட நிர்வாகத்திடம் பள்ளி நிர்வாகம் முறையிட்டபோது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பள்ளிக்கு அருகே பெட்ரோல் பங்க் அமைக்க தடைவிதிக்கக் கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
அதில், பள்ளி, மருத்துவமனைகள் அருகில் பெட்ரோல் பங்குகள் அமைக்கக் கூடாது என விதி உள்ளது. இதை மீறி ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
பெட்ரோலிய விற்பனை மையம் இருக்கும் இடங்களில் காற்று மாசு மற்றும் ஒலி மாசு ஏற்படும். அதுமட்டுமல்லாமல் பள்ளி குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறுகள், உடல் நலக் குறைவு ஏற்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு மத்திய பெட்ரோலிய அமைச்சகம், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிர்வாகம் ஆகியோர் வழக்குத் தொடர்பாக பிப்ரவரி 27ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
Also Read
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?