Tamilnadu
“CAAக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுக” : சென்னையில் லட்சக்கணக்கில் குவிந்த இஸ்லாமியர்கள்! (Album)
குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடர்ந்து 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இஸ்லாமிய மக்கள், அதன் ஒரு பகுதியாக இன்று தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.
அதன் படி, சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் இருந்து சட்டப்பேரவையை நோக்கி பேரணி தொடங்கியுள்ளது. இதில், லட்சக்கணக்கான இஸ்லாமிய மக்கள் கையில் No CAA, No NRC, No NPR என பதாகைகளையும் ஏந்தியும் தேசியக்கொடி ஏந்தியும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டு வருகின்றனர்.
மேலும், குடியுரிமை சட்டம், என்.பி.ஆர்.,ம் என்.ஆர்.சி. போன்ற சட்டங்களுக்கு எதிராக தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் #PassAntiCAAResolutionADMK என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Also Read
-
“தமிழ்நாடா, உத்தரபிரதேசமா? 15 நாள்.. 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள்” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
”தவெக ஆட்சியில் குற்றவாளிகளின் கூடாரமாக தமிழ்நாடு.. வாய் திறப்பாரா முதல்வர் விஜய்?” : முரசொலி விமர்சனம்!
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!