Tamilnadu
“CAAக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுக” : சென்னையில் லட்சக்கணக்கில் குவிந்த இஸ்லாமியர்கள்! (Album)
குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடர்ந்து 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இஸ்லாமிய மக்கள், அதன் ஒரு பகுதியாக இன்று தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.
அதன் படி, சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் இருந்து சட்டப்பேரவையை நோக்கி பேரணி தொடங்கியுள்ளது. இதில், லட்சக்கணக்கான இஸ்லாமிய மக்கள் கையில் No CAA, No NRC, No NPR என பதாகைகளையும் ஏந்தியும் தேசியக்கொடி ஏந்தியும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டு வருகின்றனர்.
மேலும், குடியுரிமை சட்டம், என்.பி.ஆர்.,ம் என்.ஆர்.சி. போன்ற சட்டங்களுக்கு எதிராக தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் #PassAntiCAAResolutionADMK என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Also Read
-
“துள்ளி எழுந்த பள்ளிக்கல்வித்துறை.. இதுதான் மிகப்பெரிய சாதனை” - முரசொலி தலையங்கம் பாராட்டு!
-
விதிமீறல்களுக்கு பெயர்போன பா.ஜ.க! : நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம்!
-
பாகிஸ்தான் உதவியை நாடும் பா.ஜ.க! : தேர்தல் விதிமுறைகளை தகர்க்கும் மோடி அரசு!
-
குற்றவாளிகளுக்கு தரப்படும் ஜாமீன், முதல்வர்களுக்கு மறுக்கப்படுகிறது : பா.ஜ.க.வின் அடக்குமுறை அரசியல்!
-
”திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் மனங்களில் தாண்டவமாடும் மகிழ்ச்சி” : கி.வீரமணி வாழ்த்து!