Tamilnadu
“CAAக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுக” : சென்னையில் லட்சக்கணக்கில் குவிந்த இஸ்லாமியர்கள்! (Album)
குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடர்ந்து 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இஸ்லாமிய மக்கள், அதன் ஒரு பகுதியாக இன்று தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.
அதன் படி, சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் இருந்து சட்டப்பேரவையை நோக்கி பேரணி தொடங்கியுள்ளது. இதில், லட்சக்கணக்கான இஸ்லாமிய மக்கள் கையில் No CAA, No NRC, No NPR என பதாகைகளையும் ஏந்தியும் தேசியக்கொடி ஏந்தியும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டு வருகின்றனர்.
மேலும், குடியுரிமை சட்டம், என்.பி.ஆர்.,ம் என்.ஆர்.சி. போன்ற சட்டங்களுக்கு எதிராக தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் #PassAntiCAAResolutionADMK என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!