Tamilnadu
சீனாவிலிருந்து கப்பலில் வந்த பூனை... கொரோனா அபாயத்தால் அதிகாரிகள் அச்சம் - சென்னையில் பரபரப்பு!
கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனா உருக்குலைந்து போயுள்ளது. இதுவரை இந்த நோய்த் தொற்று காரணமாக சுமார் 1,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் உலக நாடுகள் அனைத்தும் பெரும் அச்சுறுத்தல்களைச் சந்தித்து வருகின்றன. உலக சுகாதார மையம் சர்வதேச மருத்துவ அவசர நிலையை பிரகடனப்படுத்தி மக்களை விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தி வருகிறது.
சீனாவில் இருந்து இந்தியா வருபவர்களை தீவிரமாக கண்காணித்து கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என பரிசோதித்த பிறகே அனுமதிக்கின்றனர். மேலும், கொரோனா எதிரொலியால் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் வரத்தும் தடைபட்டுள்ளது.
வான்வழி, கடல்வழி என அனைத்து மார்க்கங்களிலும் தீவிரமான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவில் இருந்து கப்பல் வழியாக சென்னை துறைமுகத்துக்கு வந்த கன்டெய்னர் லாரி ஒன்றில் கூண்டுக்குள் அடைபட்ட பூனை இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனையடுத்து துறைமுக அதிகாரிகள் சுகாதாரத் துறைக்கு தகவல் கொடுத்த பிறகு, உடனடியாக விரைந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் சீனாவில் இருந்து வந்த பூனையை பரிசோதித்துள்ளனர். அப்போது, அந்தப் பூனைக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏதும் இல்லையென நிரூபணமானதால் சற்று ஆசுவாசம் அடைந்தனர்.
இருப்பினும், அந்தப் பூனை வெளியே அனுமதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும், பொம்மைகள் நிறைந்த கன்டெய்னரில் கூண்டுக்குள் பூனை இருந்தது பல்வேறு கேள்விகளுக்கு வித்திட்டுள்ளதால் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!