Tamilnadu
"இரண்டு தேர்வுகளுக்கும் இடைவெளி விட்டு நடத்துக” - TNPSC & TRB க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
வட்டார கல்வி அலுவலர் பணி இடங்களுக்கான தேர்வுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வுகள் வருகிற 14, 15 மற்றும் 16-ந் தேதிகளில் நடைபெற உள்ளன.
மேலும், டி.என்.பி.எஸ்.சி முறைகேடு எதிரொலியாக தேர்வு மையங்களை ஆசிரியர் தேர்வு வாரியமே ஒதுக்கீடு செய்ய உள்ளது. அதன்படி தேர்வர்களின் சொந்த மாவட்டத்தை தவிர்த்து பிற மாவட்டங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்படும் எனவும், 3 நாட்களுக்கு முன்புதான் தேர்வு மையம் தெரிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரு பணியிடங்களுக்குமான தேர்வுகளையும் ஒரே நேரத்தில் நடத்துவதால் வேலைவாய்ப்புக்கு காத்திருக்கும் இளைஞர்கள் ஏதேனும் ஒன்றை மட்டுமே எழுதும் சூழல் ஏற்பட்டுள்ளதால் தேர்வுகளை இடைவெளி கொடுத்து நடத்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “TRB & TNPSC மூலமாக வரும் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் வட்டார கல்வி அலுவலர் தேர்வும், சுருக்கெழுத்தர் தேர்வும் நடைபெறுகிறது. இதனால் இளைஞர்கள் இரு தேர்வில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்யவேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, இரண்டு தேர்வுக்கும் இரண்டு வார இடைவெளி கொடுத்து நடத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!