Tamilnadu
பெரியகோவிலுக்கு தமிழ் வழியில் குடமுழுக்கு நடத்தாவிட்டால் போராட்டம் நடக்கும் - எச்சரிக்கும் அமைப்புகள் !
தஞ்சை பெரிய கோயில் மீட்புக்குழு சார்பில் கோரிக்கை மாநாடு நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டில் பல்வேறு தமிழறிஞர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.
23 ஆண்டுகளுக்கு பின், வரும் பிப்ரவரி 5ம் தேதி நடத்தப்பட உள்ள தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழாவை தமிழ்மரபு வழி நடத்திட வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
இதற்கிடையே, தஞ்சை பெரிய கோயிலில் தமிழ் மரபுவழி குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்கப்படாவிட்டால், தமிழகம் முழுவதும் மக்களை திரட்டி போராட்டங்கள் நடத்தப்படும் என்று பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவை தமிழ் மொழியில் நடத்திட வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!