Tamilnadu
‘சிங்கம் சூர்யா நாங்கதான்...’: தில்லாலங்கடி வேலை பார்த்த சமையல் மாஸ்டர்கள்- பல லட்ச ரூபாய் மோசடி!
வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த விருதம்பட்டு காவல்நிலைய சரக காவலர்கள் சம்பவத்தன்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி ஆவணங்களை கேட்டுள்ளனர்
அப்போது, பைக்கில் வந்தவர்கள் “நாங்கள் யார் தெரியுமா, சி.பி.ஐ., அதிகாரிகள், எங்க வண்டியையே மடக்குறீங்க” எனக் கூறி தங்களிடம் இருந்த சி.பி.ஐ., அடையாள அட்டையை காட்டியுள்ளனர்.
சந்தேகமடந்த போலிஸார் அவர்கள் இருவரிடமும் துருவி, துருவி விசாரணையில் ஈடுபட்டனர். அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.
அதில், கைதானவர்கள் விருதம்பட்டு மைதீன்(43), கழிஞ்சூர் ஹரிஹரன் (24) என்றும், இருவரும் சதுப்பேரியில் உள்ள ஷூ கம்பெனி ஒன்றின் கேன்டினில் சமையலர்களாக பணிபுரிந்து வருவது தெரியவந்துள்ளது.
பணம் பறிக்கும் எண்ணத்தில் போலியாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., சி.பி.ஐ., அதிகாரிகள் போன்று அடையாள அட்டைகளை தயாரித்து பல நாட்களாக மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
ஃபேஸ்புக்கிலும் சிங்கம் சூர்யா போல போலிஸ் உடையில் போட்டோ எடுத்து பகிர்ந்துள்ளனர். அவர்கள் தங்கியிருக்கும் வீட்டின் அக்கம்பக்கத்தினரும் மைதீனும், ஹரிஹரனும் உண்மையான போலிஸார் என்றே இதுவரை நம்பி வருகின்றனர். மேலும், சிபிஐ போலிஸ் எனக் கூறி பலரிடம் மைதீனும், ஹரிஹரனும் பணம் பறித்துள்ளனர் என்பதும் போலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மைதீன் மற்றும் ஹரிஹரன் ஆகியோரை கைது செய்த போலிஸார், அவர்களின் ஃபேஸ்புக்கை ஆராய்ந்ததில் அவர்களுடன் இணைந்து போட்டோ எடுத்துக்கொண்ட மேலும் மூவர் குறித்த விசாரணையிலும் இறங்கியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, மைதீன் மற்றும் ஹரிஹரன் வீடுகளில் போலிஸார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.4.70 லட்சம் ரொக்கப்பணமும், போலிஸ் சீருடைகள் மற்றும் துப்பாக்கி வைக்கக் கூடிய உறைகள் கைப்பற்றப்பட்டன.
இதனைத்தொடர்ந்து இதுவரை சேகரிக்கப்பட்ட விவரங்களைக் கொண்டு கைதானவர்களின் பின்னணியில் பெரிய மோசடி கும்பல் இருக்கிறதா என்ற கோணத்தில் போலிஸார் துரித விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.இவர்களிடம் ஏமாந்தவர்கள் யார்? யார்? என்ற விசாரணையிலும் போலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
Also Read
-
உணவக உரிமையாளரை தாக்கிய பா.ஜ.க நிர்வாகி கைது : போலிஸ் அதிரடி
-
போலிஸ் பாதுகாப்பிற்கு ஆசைப்பட்டுப் பொய் புகார் : வசமாகச் சிக்கிய இந்து முன்னணி நிர்வாகி!
-
”மதத்தை வைத்து மக்களை திசை திருப்பப் பார்க்கும் மோடி” : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!
-
”மணிப்பூரில் ஓராண்டாக அமைதியைக் கொண்டுவர மறுத்து விட்ட பா.ஜ.க” : ப.சிதம்பரம்!
-
இன்றுடன் ஓராண்டாக நீடிக்கும் மணிப்பூர் வன்முறை : வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!