Tamilnadu
குடியுரிமை சட்டமா? மக்களுக்கு குழிபறிக்கும் சட்டமா? - போராட்டத்தில் தயாநிதிமாறன் எம்.பி. முழக்கம்!
குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
சட்டத்திற்கு ஆதரவளித்த அ.தி.மு.கவுக்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சட்டமன்ற உறுப்பினரும். சென்னை மேற்கு மாவட்டச் செயலாளருமான ஜெ.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், தி.மு.க நிர்வாகிகள் என பலர் பங்கேற்றனர். போராட்டத்தின் போது இது குடியுரிமை சட்டமா? மக்களுக்கு குழி பறிக்கும் சட்டமா? என முழக்கமிட்டனர்.
அப்போது பேசிய தயாநிதிமாறன், “குடியுரிமை சட்டத்திருத்தத்தை இயற்றுவதன் மூலம் பொருளாதார வீழ்ச்சியை திசைத்திருப்புவதே பா.ஜ.கவின் திட்டம். இந்தி பேசுவோரின் வாக்கு வங்கிக்காக இஸ்லாமியர்களுக்கும், தமிழர்களுக்கும் எதிராக பா.ஜ.க செயல்படுகிறது.
சிறுபான்மை மக்களுக்கு எங்கள் அரசு பாதுகாப்பாக உள்ளது என பா.ஜ.க கூறுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. குடியுரிமை சட்டம் இந்தி பேசும் இந்துக்களுக்கு ஆதரவாகவும், தமிழ் பேசும் இந்துக்களுக்கு எதிராகவுமே பா.ஜ.க இதனை கொண்டு வந்துள்ளது.
இந்த குடியுரிமை சட்டத்துக்கு தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அனுமதிக்காது. சிறுபான்மையினரின் பாதுகாவலனாக தி.மு.க என்றுமே இருக்கும்” என தயாநிதிமாறன் கூறினார்.
Also Read
-
“தி.மு.க.வின் இன்னொரு முகத்தை நீங்கள் பார்க்க வேண்டி இருக்கும்!“: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
“தமிழர்களைப் படிப்பறிவற்றவர்கள் என்பதா? பியூஷ்கோயல் நாவை அடக்கிப் பேச வேண்டும்!” : முதலமைச்சர் கண்டனம்!
-
பெரியார் மண்ணில் அ.தி.மு.க இப்படி பா.ஜ.க-வுடன் கைகோர்த்து நிற்கலாமா? : பழனிசாமிக்கு டி.ராஜா கேள்வி!
-
#Delimitation இந்தியாவின் தென் முனையில் இருந்து உரிமைக் குரல் எழுப்புவோம் : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
செய்தியாளர் மீது தாக்குதல் : ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளரின் செயலால் பரபரப்பு!