Tamilnadu
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னையில் போரட்டத்தில் ஈடுப்பட்ட அசாம் இளைஞர்கள்!
பா.ஜ.க அரசு குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி வடகிழக்கு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் பணிபுரியும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் குடியுரிமை மசோதாவை எதிர்த்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே கூடி போராட்டம் நடத்த முயற்சித்தனர். அதற்கு அனுமதி மறுத்த போலிஸார், மீறினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர்களை எச்சரித்தனர்.
பின்னர், அவர்களை வாகனத்தில் ஏற்றி சென்று வள்ளுவர் கோட்டத்தில் இறக்கிவிட்டனர். மேலும் அங்கு போராட்டம் நடத்திக் கொள்ள அசாம் மாநில இளைஞர்களுக்கு அனுமதி அளித்தனர்.
இதனையடுத்து அங்கு 200-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பா.ஜ.க அரசுக்கு எதிராகவும், குடியுரிமை சட்டத்தை புறக்கணிக்கும் வகையிலும் உள்ள பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
Also Read
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை கண்டு ஒப்பாரி ஓலமிடும் பழனிசாமி : அமைச்சர் ரகுபதிக்கு பதிலடி!
-
திண்டுக்கல் மாவட்டத்தில் 2,62,864 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்!
-
“நீங்கள் மற்றவர்களுக்கு Inspire ஆக இருக்க வேண்டும்”: மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000! : நாளை (ஜன.8) தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“Very sorry உங்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!