Tamilnadu
‘ஏா் இந்தியா விமான சேவை திடீர் ரத்து!’
சென்னையிலிருந்து மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களுக்கு ஏா் இந்தியாவின் அலையன்ஸ் ஏா் விமான நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளாக விமானங்களை இயக்கி வந்தது.
இந்நிலையில், அவற்றில் 6 விமானங்கள் இன்றிலிருந்து நவம்பா் 30ம் தேதி வரை ரத்துசெய்யப்படுகிறது. இந்த 6 விமானங்கள் தினமும் சென்னையிலிருந்து மதுரை,திருச்சி,கோவை ஆகிய நகரங்களுக்கு சென்றுவிட்டு,மீண்டும் அங்கிருந்து சென்னை திரும்பிவரும். இதனால் மொத்தம் 12 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த விமானங்களில் குறைந்த அளவிலே கட்டணங்கள் வசூல் செய்யப்பட்டு வந்தன. இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது பயணிகளிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது சம்பந்தமாக ஏா் இந்தியா அதிகாரிகள் கூறுகையில், விமானங்கள் பற்றாகுறை காரணமாக, போதிய பயணிகள் இல்லாமல் இயக்கப்பட்டு வந்த இந்த விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த விமானங்கள் பயணிகள் அதிகமாக பயணிக்கக்கூடிய மற்ற வழித்தடங்களில் இயக்கப்படவுள்ளன எனத் தெரிவித்தனர். மேலும், அலையன்ஸ் ஏா் நிறுவனத்தால் சென்னையிலிருந்து யாழ்ப்பானம் (ஜாப்னா) வரை இயக்கப்படும் விமானம் வாரத்தில் 3 நாட்கள் தொடா்ந்து இயக்கப்படும் என்று தெரிவித்தனர்.
சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏர் இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை மார்ச் மாதத்திற்குள் தனியாரிடம் விற்க முடிவு எடுத்துள்ளதாக கூறியது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்.. பிரம்மாண்ட விழா.. கழகத்தில் இணைந்த 5,000 மாற்றுக் கட்சியினர்”
-
“ஓய்வை அறிவித்த இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்.. கட்டாயப் படுத்தப்பட்டாரா?” - முழு விவரம் அறிய!
-
“எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்.. உடன்பிறப்புக்களே தயாராகுங்கள்” - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தவெக அமைச்சர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய சபரீசன்... 15 நாட்கள் மட்டுமே கெடு... விவரம் உள்ளே!
-
போதை பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ : தவெக அமைச்சருக்கு எதிராக களமிறங்கும் திமுக மாணவர் அணி !