Tamilnadu
’எடப்பாடிக்கு எதுக்கு டாக்டர் பட்டம் ?’ : மிகவும் வெட்கக்கேடான செயல் - நீதிமன்றத்தில் கொதித்த முகிலன்
திருச்சி மத்திய சிறையில் இருக்கும் சமூக செயற்பாட்டாளர் முகிலன் மீது, பெண் அளித்துள்ள பாலியல் வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் இன்று கரூர் நீதிமன்றம் 1-ல் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கை விசாரித்த கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜய் கார்த்திக், அடுத்த மாதம் 5-ம் தேதி முகிலனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
பிறகு மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லும் போது நீதிமன்ற வளாகத்தில் கோஷமிட்ட முகிலன், எடப்பாடிக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது வெட்கக்கேடானது. கொடுத்த பட்டத்தை திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், பவளப்பாறை திருடப்படுவதை பாதுகாக்கப்பட வேண்டும் என போராடிய சமூகப் போராளி திருமுருகனை கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார்.
மேலும், அலிபாபாவும் 40 திருடர்களும் போல, எடப்பாடியும், பன்னீர்செல்வமும், அ.தி.மு.க அமைச்சர்களும் கொள்ளை அடித்து வருவதாக சீமான் குறிப்பிட்டுள்ளார். உண்மையில், அவர்கள் 40 திருடர்கள் அல்ல, 40 கொள்ளையர்கள். நாள் ஒன்றுக்கு ரூ.300 கோடி அளவில் ஊழல் செய்து வருகின்றனர் என்று குறிப்பிட்டார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Also Read
-
“தமிழர் பண்பாட்டு நுண்ணுணர்வை வெளிப்படுத்தும் அரிய சான்று!” : தங்கம் தென்னரசு பெருமிதம்!
-
“3 ஃபைல் இருக்குனா வெளியிட வேண்டியதுதானா.. கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லை” - செந்தில் பாலாஜி காட்டம்!
-
இடதுசாரிகளா? அதிகாரிகளா? யார் வேண்டும் : முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய பெ.சண்முகம்!
-
‘மகளைக் காதலித்ததால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. கூலிப்படையை ஏவி தவெக நிர்வாகியின் வெறிச்செயல்’
-
நெஞ்சத்தைக் கனக்கச் செய்கின்றன : உதவியாளராகப் பணியாற்றிய ஹரிகிருஷ்ணன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!