Tamilnadu
அடுத்த 48 மணிநேரத்திற்கு 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் : வானிலை மையம் எச்சரிக்கை!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை மைய இயக்குநர் புவியரசன், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, கடலூர், நெல்லை, தூத்துக்குடி, விழுப்புரம், நீலகிரி, திருவண்ணாமலை, கோயமுத்தூர், சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றார்.
தற்போது பெய்துவரும் மழை நாளை வரை நீடிக்கும் என்றும், 2 நாட்களுக்குள் படிப்படியாக மழைப்பொழிவு குறையும் எனவும் கூறிய அவர், அதன் பின்னர் மீண்டும் தீவிரமான மழை பெய்யக்கூடும் என்றார்.
மேலும், தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால் கேரளா, மாலத்தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு குமரிக்கடல் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த 24 மணிநேரத்தில் தூத்துக்குடி எட்டயபுரத்தில் 14 செ.மீ, கொடைக்கானலில் 13 செ.மீ, மாமல்லபுரத்தில் 7 செ.மீ மழையும் அதிகபட்சமாக பதிவாகியுள்ளது எனக் கூறியுள்ளார்.
Also Read
-
ரூ.210.17 கோடியில் அரசுப் பள்ளிகளுக்கான புதிய கட்டடங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
150 க்கும் மேற்பட்ட குழுக்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள்.. இந்திய நாட்டிய விழா தொடக்கம்- எங்கு? விவரம்!
-
ஆட்டோ ஓட்டுநரின் கன்னத்தில் பளார்.. நடு ரோட்டில் அதிகார அத்துமீறலில் ஈடுபட்ட பாஜக MLA-மும்பையில் நடந்தது?
-
“வாக்குரிமை என்பது நம்முடைய கடமை மட்டுமல்ல; நம்முடைய உரிமை!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
“கீழடி - தமிழர்களின் தாய்மடி; பொருநை - தமிழர்களின் பெருமை!” : முரசொலி தலையங்கம்!