Tamilnadu
அடுத்த 48 மணிநேரத்திற்கு 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் : வானிலை மையம் எச்சரிக்கை!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை மைய இயக்குநர் புவியரசன், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, கடலூர், நெல்லை, தூத்துக்குடி, விழுப்புரம், நீலகிரி, திருவண்ணாமலை, கோயமுத்தூர், சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றார்.
தற்போது பெய்துவரும் மழை நாளை வரை நீடிக்கும் என்றும், 2 நாட்களுக்குள் படிப்படியாக மழைப்பொழிவு குறையும் எனவும் கூறிய அவர், அதன் பின்னர் மீண்டும் தீவிரமான மழை பெய்யக்கூடும் என்றார்.
மேலும், தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால் கேரளா, மாலத்தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு குமரிக்கடல் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த 24 மணிநேரத்தில் தூத்துக்குடி எட்டயபுரத்தில் 14 செ.மீ, கொடைக்கானலில் 13 செ.மீ, மாமல்லபுரத்தில் 7 செ.மீ மழையும் அதிகபட்சமாக பதிவாகியுள்ளது எனக் கூறியுள்ளார்.
Also Read
-
46 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஊக்கச்சலுகைகள்... அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன?
-
வெளியான வாக்காளர் இறுதிப்பட்டியல்... உங்கள் பெயர் உள்ளதா? - முழு விவரம் தெரிந்து கொள்ளுங்கள்!
-
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான தோல்வி: இந்திய அணியில் மாற்றம் நிகழுமா? அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா?
-
“உங்கள் தூக்கத்தை கெடுத்த surgical strike” - பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
முதல் நாளே 120 தொகுதிகள்... வீடு வீடாக பரப்புரை... களத்தில் இறங்கியது ஸ்டாலினின் மகளிர் படை!