Tamilnadu
நீட் ஆள்மாறாட்டம் : சிக்கிய சென்னை மாணவி - சிபிசிஐடி போலிஸார் விசாரணை!
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் ஆகியோர் சிபிசிஐடி போலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வரிசையாகச் சிக்கி வருகின்றனர்.
எஸ்ஆர்எம் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் ராகுல் அவரது தந்தை டேவிஸ், சென்னை பாலாஜி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் பிரவீன் அவரது தந்தை சரவணகுமார், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவன் இர்பான் அவருடைய தந்தை முகமது சபி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் மேலும் ஒரு மாணவியிடம் சிபிசிஐடி போலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
சென்னை சவிதா மருத்துவக் கல்லூரி மாணவி பிரியங்கா ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து தேனி சி.பி.சி.ஐ.டி போலிஸார் மாணவியையும் அவரது தாயாரையும் நேற்று இரவு தேனிக்கு அழைத்து வந்து சிபிசிஐடி போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று காலை முதல் மாணவி பிரியங்காவிடம் தொடர்ந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் சான்றிதழ்கள் அனைத்தையும் வாங்கி சரிபார்த்த அதிகாரிகள் அவர் மருத்துவக் கல்லூரியில் சேர எவ்வளவு பணம் கொடுத்தார் எனவும் புரோக்கர்கள் யாரையேனும் அணுகினாரா என்றும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
பாலியல் வழக்கு : தொடர்ந்து எழும் புகார்... கர்நாடக முன்னாள் அமைச்சர் HD ரேவண்ணா அதிரடி கைது !
-
புகழ்பெற்ற மல்யுத்த வீரரை வீழ்த்திய வீராங்கனை... தோல்வியே சந்திக்காத இந்திய பெண்ணை கௌரவித்த Google!
-
இந்தியப் பெருங்கடலில் பல மடங்கு அதிகரித்த வெப்பநிலை : கால நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை !
-
பிரஜ்வல் ரேவண்ணாவை பிரதமர் மோடி எதற்காக பாதுகாத்து வருகிறார்? : ராகுல் காந்தி கேள்வி!
-
மேற்கு வங்க ஆளுநர் மீதான பாலியல் புகார் : 8 பேர் கொண்ட குழுவை அமைத்து கொல்கத்தா போலீஸ் உத்தரவு !