Tamilnadu
லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளை : திருவாரூர் அ.ம.மு.க பிரமுகரிடம் போலிஸார் விசாரணை!
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரியில் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தனிப்படை போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 பேர் கொண்ட கும்பல் நகைக்கடையில் கைவரிசை காட்டியுள்ளது என முதற்கட்ட விசாரணை முடிவில் தெரியவந்துள்ளது. இதுவரை கொள்ளை தொடர்பாக மணிகண்டன், முரளி, கனகவள்ளி, கார்த்தி ஆகிய நால்வரை கைது செய்த காவல்துறை 4 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளது.
நகைக்கொள்ளையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருவாரூர் முருகன் தலைமறைவாக உள்ள நிலையில் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சீராத்தோப்பைச் சேர்ந்த பிரதாப் என்ற நபரை பிடித்து திருச்சிக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு இருக்கையில், புதிய திருப்பமாக திருவாரூரைச் சேர்ந்த அ.ம.மு.க பிரமுகரான திருமாறன் என்பவரிடம் லலிதா ஜுவல்லரி கொள்ளை தொடர்பாக தனிப்படை போலிஸார் விசாரித்து வருகின்றனர்.
Also Read
-
பிளாக்மெயில் செய்வதும்தான் உங்களது வேலையா? : தேவேந்திர பட்னாவிஸ்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : சீர்காழியில் உற்சாக வரவேற்பு!
-
“திருவெறும்பூர் எனது தாய் வீடு” : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நெகிழ்ச்சி!
-
“எதையும் அறிந்து புரிந்து கொள்ளும் திறமற்ற பழனிசாமிக்குச் சொன்னாலும் புரியாது!” : முரசொலி கண்டனம்!
-
சாத்தான்குளம் வழக்கு : 9 போலீசாருக்கு இரட்டை மரண தண்டனை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!