Tamilnadu
லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளை : திருவாரூர் அ.ம.மு.க பிரமுகரிடம் போலிஸார் விசாரணை!
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரியில் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தனிப்படை போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 பேர் கொண்ட கும்பல் நகைக்கடையில் கைவரிசை காட்டியுள்ளது என முதற்கட்ட விசாரணை முடிவில் தெரியவந்துள்ளது. இதுவரை கொள்ளை தொடர்பாக மணிகண்டன், முரளி, கனகவள்ளி, கார்த்தி ஆகிய நால்வரை கைது செய்த காவல்துறை 4 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளது.
நகைக்கொள்ளையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருவாரூர் முருகன் தலைமறைவாக உள்ள நிலையில் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சீராத்தோப்பைச் சேர்ந்த பிரதாப் என்ற நபரை பிடித்து திருச்சிக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு இருக்கையில், புதிய திருப்பமாக திருவாரூரைச் சேர்ந்த அ.ம.மு.க பிரமுகரான திருமாறன் என்பவரிடம் லலிதா ஜுவல்லரி கொள்ளை தொடர்பாக தனிப்படை போலிஸார் விசாரித்து வருகின்றனர்.
Also Read
-
பாஜகவின் வண்டவாளத்தை அம்பலப்படுத்தும் Youtuber குறித்து அவதூறு பரப்பும் பாஜகவினர்... குவியும் கண்டனம் !
-
இங்கிலாந்து வாழ் இந்தியர்களாலும் வெறுக்கப்படும் மோடி!
-
இந்தியாவிற்கு அவப்பெயர் தேடி தந்த மோடி! : முதலீடு செய்ய தாமதிக்கும் Tesla!
-
ஆபாச வீடியோ விவகாரம் : பிரஜ்வல் ரேவண்ணா தப்பிக்க உதவியவர் யார்? மோடி மௌனத்தை குறிப்பிட்டு D.ராஜா கேள்வி!
-
பாலியல் புகார் : மகனை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய தந்தை : பாஜக - JDS கூட்டணிக்கு சிக்கல் !