Tamilnadu
போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுவோர் கவனத்திற்கு... TNPSC குரூப் 2 & 2ஏ பாடத்திட்டம் மாற்றம்!
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பாடத்திட்டத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி, குரூப் 2 முதல்நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கப்பட்டுள்ளது. மொழித்தாளுக்கு பதிலாக, பொது அறிவு வினாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது என டி.என்.பி.எஸ்.சி விளக்கமளித்துள்ளது.
மொத்தம் 200 மதிப்பெண்களில் 100 கேள்விகள் பொது அறிவாகவும், 100 கேள்விகள் தமிழ் அல்லது ஆங்கிலம் என மொழித்தாளகவும் இருந்தது. தற்போது மாற்றப்பட்டுள்ள பாடத்திட்டத்தின்படி 175 வினாக்கள் பொதுஅறிவு வினாக்களாகவும், 25 வினாக்கள் திறனறி வினாக்களாகவும் கேட்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், முன்னர் குரூப் 2 தேர்வுக்கு மட்டுமே முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. குரூப் 2ஏ தேர்வில் கொள்குறி வினாக்களுக்கு மட்டும் பதிலளித்துவிட்டு அடுத்த சுற்று நேர்காணல் நடத்தப்பட்டு வந்தது. தற்போது குரூப் 2ஏ-வுக்கும் முதல்நிலைத் தேர்வு எழுதும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.
Also Read
-
விதிமீறல்களுக்கு பெயர்போன பா.ஜ.க! : நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம்!
-
பாகிஸ்தான் உதவியை நாடும் பா.ஜ.க! : தேர்தல் விதிமுறைகளை தகர்க்கும் மோடி அரசு!
-
குற்றவாளிகளுக்கு தரப்படும் ஜாமீன், முதல்வர்களுக்கு மறுக்கப்படுகிறது : பா.ஜ.க.வின் அடக்குமுறை அரசியல்!
-
”திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் மனங்களில் தாண்டவமாடும் மகிழ்ச்சி” : கி.வீரமணி வாழ்த்து!
-
”அரசியல் சாசனம் இல்லாமல் நாட்டை ஆட்சி செய்ய நினைக்கும் மோடி” : ராகுல் காந்தி தாக்கு!