Tamilnadu
போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுவோர் கவனத்திற்கு... TNPSC குரூப் 2 & 2ஏ பாடத்திட்டம் மாற்றம்!
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பாடத்திட்டத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி, குரூப் 2 முதல்நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கப்பட்டுள்ளது. மொழித்தாளுக்கு பதிலாக, பொது அறிவு வினாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது என டி.என்.பி.எஸ்.சி விளக்கமளித்துள்ளது.
மொத்தம் 200 மதிப்பெண்களில் 100 கேள்விகள் பொது அறிவாகவும், 100 கேள்விகள் தமிழ் அல்லது ஆங்கிலம் என மொழித்தாளகவும் இருந்தது. தற்போது மாற்றப்பட்டுள்ள பாடத்திட்டத்தின்படி 175 வினாக்கள் பொதுஅறிவு வினாக்களாகவும், 25 வினாக்கள் திறனறி வினாக்களாகவும் கேட்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், முன்னர் குரூப் 2 தேர்வுக்கு மட்டுமே முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. குரூப் 2ஏ தேர்வில் கொள்குறி வினாக்களுக்கு மட்டும் பதிலளித்துவிட்டு அடுத்த சுற்று நேர்காணல் நடத்தப்பட்டு வந்தது. தற்போது குரூப் 2ஏ-வுக்கும் முதல்நிலைத் தேர்வு எழுதும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.
Also Read
-
மோசமான தேசிய நெடுஞ்சாலைகளால் அதிகரிக்கும் விபத்துகள் : நாடாளுமன்றத்தில் திமுக MP-க்கள் குற்றச்சாட்டு!
-
கலவரம் செய்ய துடிக்கும் கயவர்களுக்குத் துணை போவது வெட்கக்கேடு : பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்!
-
மதக் கலவரத்தைத் தூண்டுவதா? - உயர்நீதிமன்ற நீதிபதியே துணை போவதா? : ஆசிரியர் கி.வீரமணி ஆவேசம்!
-
தமிழ்நாட்டை வஞ்சிக்கிற போக்கு தொடருமேயானால்... : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!
-
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்