Tamilnadu
போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுவோர் கவனத்திற்கு... TNPSC குரூப் 2 & 2ஏ பாடத்திட்டம் மாற்றம்!
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பாடத்திட்டத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி, குரூப் 2 முதல்நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கப்பட்டுள்ளது. மொழித்தாளுக்கு பதிலாக, பொது அறிவு வினாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது என டி.என்.பி.எஸ்.சி விளக்கமளித்துள்ளது.
மொத்தம் 200 மதிப்பெண்களில் 100 கேள்விகள் பொது அறிவாகவும், 100 கேள்விகள் தமிழ் அல்லது ஆங்கிலம் என மொழித்தாளகவும் இருந்தது. தற்போது மாற்றப்பட்டுள்ள பாடத்திட்டத்தின்படி 175 வினாக்கள் பொதுஅறிவு வினாக்களாகவும், 25 வினாக்கள் திறனறி வினாக்களாகவும் கேட்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், முன்னர் குரூப் 2 தேர்வுக்கு மட்டுமே முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. குரூப் 2ஏ தேர்வில் கொள்குறி வினாக்களுக்கு மட்டும் பதிலளித்துவிட்டு அடுத்த சுற்று நேர்காணல் நடத்தப்பட்டு வந்தது. தற்போது குரூப் 2ஏ-வுக்கும் முதல்நிலைத் தேர்வு எழுதும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.
Also Read
-
5 மாநில தேர்தல் : ஆட்சியை பிடிக்கப்போவது யார்? : வெளியான Exit Polls முடிவுகள்!
-
தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க கூட்டணியே ஆட்சி அமைக்கும்: உறுதி செய்த Exit Polls முடிவுகள்!
-
இஸ்லாமியச் சிறுமிக்கு இந்து பெற்றோர் : உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு!
-
பா.ஜ.க ஆளும் மாநிலத்தின் அவலம் - உயிருக்குப் போராடிய கணவர்: மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!
-
”தேர்தல் ஆணையமா ஆளுநர் ஆர்.என்.ரவி.. அமைதியாக நடக்கிறதா மேற்கு வங்க தேர்தல்?” : முரசொலி கேள்வி!