Tamilnadu
அனுமதியின்றி அச்சடித்தால் அச்சக உரிமம் பறிக்கப்படும்: பேனர் வைக்க சென்னை மாநகராட்சி கடும் கட்டுப்பாடு!
சென்னை மாநகரப் பகுதிகளில் அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர கமிஷ்னர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை மாநகராட்சி எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் விளம்பர பதாகைகள் மற்றும் பேனர்கள் ஆகியவை மாநகராட்சி ஆணையரின் அனுமதி பெற்ற பின்னரே அமைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
விளம்பர பதாகைகள் அச்சிடும் போது, அதன் கீழ் அனுமதி எண், அனுமதி வழங்கப்பட்ட நாள், அனுமதி அளிக்கப்பட்ட அளவின் விவரம், கால அவகாசம் ஆகியவை இடம்பெற்றிருக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி தொழில் உரிம விதிகளுக்கு மாறாக, உரிமம் இன்றி பதாகைகள் அமைப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவ்வாறு அனுமதி, உரிமம் இல்லாமல் பேனர்களை அச்சடித்தால் அச்சகத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை அனைத்து அச்சகங்களும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது
Also Read
-
கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை... சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கிய மேயர் பிரியா !
-
120- க்கும் மேற்பட்ட தொலைந்த மொபைல் போன்களை மீட்டெடுத்த ரயில்வே துறை... சாத்தியமானது எப்படி ?
-
"SIR குறித்து மக்கள் ஏமாந்துவிடாமல் எச்சரிக்கை மணியடிப்பது மிகமிகத் தேவை" - தி.க தலைவர் கி.வீரமணி !
-
Reels மோகம் : தண்டவாளத்தில் 2 நண்பர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!
-
2026-ல் “திராவிட மாடல் 2.0 தொடங்கியது!” என்பதுதான் தலைப்புச்செய்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!