Tamilnadu
செப்டம்பர் 9ம் தேதி முதல் இடி, காற்றுடன் அடித்து நொறுக்கப்போகும் கனமழை : வெதர்மேன் கணிப்பு!
சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் வரும் 9ம் தேதி முதல் 17ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக ‘தமிழ்நாடு வெதர்மேன்’ பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வடமாநிலங்களிலும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் மாலை, இரவு நேரங்களில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்குச் சுழற்சி காரணமாக கனமழை பெய்தது.
இந்நிலையில் தென்மேற்குப் பருவமழை குறித்தும், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு குறித்தும் பதிவிட்டுள்ளார் ‘தமிழ்நாடு வெதர்மேன்’ என அறியப்படும் பிரதீப் ஜான்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, தென்மேற்குப் பருவமழையால் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வரை கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதன்பின் மழை படிப்படியாகக் குறையத் தொடங்கும்.
செப்டம்பர் 9ம் தேதி முதல் வெப்பச் சலன மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை உள்ளிட்ட வடதமிழகப் பகுதிகள், மத்திய தமிழகம், டெல்டா மாவட்டங்களில் மாலை நேரத்திலும், இரவு நேரத்திலும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.
குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும், கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் உள்ள மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் காற்றுடனும் இடியுடனும் பலத்த மழை பெய்யக்கூடும்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”இது நம்ம ஆட்டம் 2026”- மாநில அளவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கிய துணை முலமைச்சர் உதயநிதி
-
உலகளவில் முதன்முறையாக.. மெட்ரோ சுரங்கப்பாதைக்கு மேல் கட்டப்பட்டு மேம்பாலம்! - அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!
-
சமூக நீதிக்கான சரித்திர நாயகர் : இந்திய அளவில் ஆதிதிராவிட பழங்குடியின மக்கள் முன்னேற்றம்!
-
என்ன சாதித்தார் காப்பி அடிக்க...? : எந்தக் கூச்சமும் இல்லாமல் சுற்றிக் கொண்டிருப்பவர்தான் பழனிசாமி!
-
46 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஊக்கச்சலுகைகள்... அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன?